முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு எதிரொலி: சென்னையில் காற்று மாசு பாதியாக குறைந்தது - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாடு விதித்தன் காரணமாக வட மாநிலங்களை விட  சென்னையில் தீபாவளியன்று காற்று மாசு பாதியாக குறைந்தது. காற்று மாசு 65 குறியீடாக பதிவானதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

நேரம் ஒதுக்கீடு

தலைநகர் டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், தீபாவளியன்று பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் நேர கட்டுப்பாடு விதித்தது. அதன்படி இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தைப் பொருத்தவரையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது. இதையடுத்து, தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கும் நேரமாக தமிழக அரசு அறிவித்தது.

தீபாவளி திருநாளில் சென்னையில் காற்றின் தரத்தை கண்டறிய பல இடங்களில் குறிப்பாக திருவல்லிக்கேணி, தியாகராயநகர், வேளச்சேரி என காற்று மாசை அளக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்தது.

பாதியாக குறைவு

இது குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுவாக வழக்கமான நாட்களை விட தீபாவளி அன்று பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதால் அதனால் ஏற்படும் புகையினால் காற்று மாசு அபாய அளவை எட்டும். இதனை தொடர்ந்து கண்காணித்து வரும் மாசு கட்டுப்பாடு வாரியம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று சென்னையில் குறைந்த அளவு காற்று மாசு பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. தீபாவளிக்கு முன்னும் பின்னும் கணக்கிட்டதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்றில் மாசு பாதியாக குறைந்திருந்தது கண்டறியப்பட்டது. தீபாவளி தினமான 6-ந்தேதி இரவு மட்டும் காற்றில் மாசு சிறிது அதிகரித்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

65 குறியீடாக...

தலைநகர் டெல்லியில் சராசரி காற்று மாசு 349 குறியீடு என மிகவும் அபாய அளவில் உள்ளது. டெல்லியை ஒப்பிடும் போது, சென்னையில் சாதாரண அளவில் காற்று மாசு, 65 குறியீடாக பதிவாகி இருந்ததாகவும், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் காற்று மாசு குறியீடு 87 ஆகவும், ஆக்ராவில் 353 என்ற அளவில் உள்ளது. வட மாநிலங்களை விட சென்னையில் மிகவும் குறைந்த அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பட்டாசு வெடிப்பதினால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசினை, கண்டறியும் கருவி, சென்னையில், தியாகராயநகர், பெசன்ட் நகர் உள்பட 5 இடங்களில் நிறுவப்பட்டு, கணக்கிட, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து