முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த ஆண்டில் நிகழும் முதல் அதிசய நிகழ்வு வரும் 20-ம் தேதி சந்திர கிரகணத்துடன் கூடிய சூப்பர் ப்ளட் மூன் தோன்றும்

புதன்கிழமை, 16 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், வரும் 20-ம் தேதி சந்திர கிரகணத்துடன் கூடிய சூப்பர் ப்ளட் மூன் என்ற அதிசயம் நிகழ உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க பூர்வகுடி மக்கள் குளிர்காலத்தில் தெரியும் பௌர்ணமி நிலவை வுல்ப் மூன் என்று அழைத்து வருகின்றனர். இந்த வுல்ப் மூன் வரும் 20 மற்றும் 21-ம் தேதிகளில் நிகழும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவில் பூமியானது பயணிக்கும் போது, சூரியனில் இருந்து நிலவுக்கு கிடைக்கும் ஒளி தடைப்பட்டு, பூமியின் நிழலானது நிலவின் மீது விழும். அப்போது நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனை ப்ளட் மூன் என ஆய்வாளர்கள் கூறுகிறார். இந்திய நேரப்படி வரும்  20-ம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் காலை வரை இது நீடிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திர கிரகணம் அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்கா போன்ற நாட்டு மக்களால் தெளிவாகக் காண முடியும் என கூறப்படுகிறது. ஆசியாவில் பல இடங்களிலும் இந்த சூப்பர் ப்ளட் வுல்ப் மூன் தெரிய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் வானில் நிகழும் முதல் அதிசய நிகழ்வு இதுவாகும். இது போன்ற ப்ளட் மூன் இனி வரும் 2021-ம் ஆண்டு மே மாதம் மட்டுமே தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து