முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலைக்கு தரிசனம் செய்ய சென்ற 2 பெண்கள் திருப்பி அனுப்பி வைப்பு

சனிக்கிழமை, 19 ஜனவரி 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம், சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கு சென்ற 2 பெண்கள் நேற்று காலை தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டம் நடந்து வருகிறது. கோவில் நடை திறந்த நாள் முதல் அங்கு செல்லும் இளம்பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

சபரிமலையில் 51 பெண்கள் இதுவரை தரிசனம் செய்துள்ளதாக கேளர அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று காலை மேலும் இரு பெண்கள் சபரிமலை செல்வதற்காக நிலக்கல் அடிவார முகாமை வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள் கோவில் நோக்கி புறப்பட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பம்பையில் ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் திரும்பி செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து இரண்டு பெண்களும் திரும்பிச் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து