எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டம், தமறாக்கி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் மூலம் எல்.கே.ஜி. முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கில வழி புதிய கல்வி திட்டம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமை வகித்தார். மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் புதிய கல்வி திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில்,
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் நல்வழிகாட்டுதலுடன் தமிழக அரசு பள்ளி கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயலாற்றி வருகிறது. கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் நிலையான சொத்தாகும். அதை முழுமையாக கற்றுக்கொண்டால் எங்கு சென்றாலும் வெற்றி பெறலாம். அதை முழுமையாக நிறைவேற்றும்விதமாக எண்ணற்ற திட்டங்களை இலவசமாக மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி வந்தபோதும் ஆங்கில வழி கல்வி அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு தேவைப்படும் நிலையில் வசதி படைத்தவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வருகிறார்கள். வசதி இல்லாத வறியவர்கள் தங்கள் பிள்ளைகளை பணம் செலுத்தி படிக்க வைக்க முடியாத சூழ்நிலையில் ஏழை மாணவர்களின் மனதில் ஆங்கில கல்வி என்பது எட்டாக்கனியாக இருந்து வந்தது. அதை உணர்ந்து மாண்புமிகு அம்மாவின் அரசு வசதி படைத்தவர்களுக்கு இணையாக வறியவர்களின் குழந்தைகளும் எவ்வித கட்டணமின்றி ஆரம்ப முதல் ஆங்கில வழி கல்வியை கற்று பயன்பெற வேண்டும் என்ற நோக்குடன் மற்ற மாநிலங்களே திரும்பி பார்க்கும் வண்ணம் தமிழகத்தில் எல்.கே.ஜி. முதல் ஆங்கில கல்வி வகுப்பு அரசு நடுநிலைப்பள்ளிகளில் துவக்க திட்டமிட்டு இன்று மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியுடன் துவக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்கள் பேருந்து மற்றும் பள்ளி வேனில் தொலை தூரத்தில் சென்று பயணம் செய்து கல்வி கற்று வருவதால் உடற்சோர்வு ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்த சிரமமாக இருக்கும் நிலை முற்றிலும் தவிர்க்கப்படும். மேலும் ஒரு நாட்டின் வளர்ச்சி கல்வித்துறையைச் சார்ந்துள்ளது. ஆகையால் மாணவர்களாகிய நீங்கள் நல்ல பழக்கவழக்கங்களை மேற்கொண்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் படிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் நாமும் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயமும் முன்னேற்றம் பெறும். அதனடிப்படையில் தற்பொழுது மாவட்ட அளவிலுள்ள நடுநிலைப்பள்ளிகளின் அருகாமையிலுள்ள அங்கன்வாடி மையங்களை இணைத்து அங்கு பயின்று வரும் குழந்தைகளுக்கு ஆங்கில வழி கல்வி வழங்கும்விதமாக இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 22 நடுநிலைப்பள்ளிகளில், தேவகோட்டையில் 24 நடுநிலைப்பள்ளிகளில், திருப்பத்தூரில் 23 நடுநிலைப்பள்ளிகளில் என ஆக மொத்தம் 69 நடுநிலைப்பள்ளிகளில் அங்கன்வாடி மையங்கள் இணைக்கப்பட்டு புதிய ஆங்கில கல்வி முறை திட்டத்தில் 1,585 மாணவ, மாணவியர்கள் சேர்க்கப்பட்டு ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் வீட்டின் அருகாமையிலே எவ்விதக் கட்டணமின்றி ஆங்கில வழி கல்வியை கற்றுக் கொள்ளமுடியும். இதனை பெற்றோர்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர்இராஜேந்திரன், சிவகங்கை வட்டார கல்வி அலுவலர் பால்ராஜ், தமறாக்கி ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் துர்காபாய், கூட்டுறவு சங்க இயக்குநர்கள் பாண்டி, அய்யனார், பலராமன், சசிக்குமார், கல்வி குழுத்தலைவர் சிவசுப்பிரமணியன், கல்வி குழு உறுப்பினர்கள் ரவி, முத்தையா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ் எத்தனை இடம்
23 Dec 2025சென்னை, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்ட இடம் வருமாறு.
-
எட்டு மாவட்டங்களுக்கு புதிய த.வெ.க. நிர்வாகிகளை நியமனம் செய்தார் விஜய்
23 Dec 2025சென்னை, த.வெ.க.வில் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் விஜய் தெரிவித்தார்.
-
நன்னிலம், மயிலாடுதுறை உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
23 Dec 2025சென்னை, நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன்’ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
-
இலங்கை கடற்பைடையால் கைதாகும் தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
23 Dec 2025சென்னை, இலங்கைக் காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீண்டகால பிரச்சினைக்கு ஒரு நிரந்த
-
சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரண் தி.மு.க. அரசு: கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Dec 2025சென்னை, சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள்
23 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 75 ஆயிரம் வாக்கு சாவடிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் வருகிற டிச.
-
6500 கி. எடையுள்ள ’புளு பேர்ட்-6' செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்
23 Dec 2025பெங்களூரு, 6500 கி. எடையுள்ள அமெரிக்காவின் ’புளுபேர்ட்-6′ செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்.
-
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
23 Dec 2025சென்னை, சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தமிழக தேர்தல் பா.ஜ.க.
-
விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் கோலி ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு
23 Dec 2025பெங்களூரு, விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் கோலி ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
-
ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
23 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு:பியூஷ் கோயலிடம் பட்டியலை கொடுத்த எடப்பாடி பழனிசாமி: பொங்கல் முடிந்ததும் அறிவிப்பு வெளியாகிறது
23 Dec 2025சென்னை, தொகுதி பங்கீடு குறித்து பியூஷ் கோயலிடம் பட்டியல் கொடுத்த எடப்பாடி பழனிசாமி பொங்கல் முடிந்ததும் தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும்.
-
இ.பி.எஸ். உடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
23 Dec 2025கோவை, அ.தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் குறித்து பேசவில்லை என்றும் தொகுதி பங்கீடு
-
பிரதமருடன் நீரஜ் சோப்ரா சந்திப்பு
23 Dec 2025புதுடெல்லி, டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை, தடகள வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது மனைவி ஹிமானி மோர் ஆகியோர் நேரில் சந்தித்து உரையாடினார்.
-
முதல் முறையாக ஐ.சி.சி. தரவரிசையில் தீப்தி சர்மா முதலிடம்
23 Dec 2025துபாய், ஐ.சி.சி.யின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
-
சட்டசபைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இ.பி.எஸ். - பியூஷ் கோயல் ஆலோசனை
23 Dec 2025சென்னை, தமிழக சட்டசபைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - தமிழக பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-12-2025.
24 Dec 2025


