Idhayam Matrimony

சட்டசபைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இ.பி.எஸ். - பியூஷ் கோயல் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 23 டிசம்பர் 2025      தமிழகம்
EPS-1-2025-12-23

சென்னை, தமிழக சட்டசபைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி நகர்வுகள், விருப்ப மனுக்கள் அளித்தல், பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கிவிட்டன. இதனால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

இந்த நிலையில், தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று சென்னை வந்தார். அவர் தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி, கள நிலவரம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சென்னை லீலா பேலசில் தொகுதி பங்கீடு தொடர்பாக சுமார் ஒன்றரை மணிநேரமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

பா.ஜ.க. சார்பில் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அ.தி.மு.க. தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அ.தி.மு.க. நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது. கூட்டணி பலப்படுத்துவது, புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி உடன் பேசியதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

இந்த பேச்சுவார்த்தையில் 30 - 40 தொகுதிகள் வரை பா.ஜ.க.விற்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனையில் விஜய் குறித்து பியூஸ் கோயல் விவாதித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெக வாக்குகளால் தே.ஜ.கூட்டணிக்கு பாதிப்பு இல்லாத வகையில் பணியாற்ற வேண்டும் என்று கோயல் அறிவுறுத்தியாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆலோசனை கூட்டம் முடிந்த பின் வெளியே வந்த பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பின்போது முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக தெரிவித்தார். மேலும் பா.ஜ.க. சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பற்றி பதில் தர மறுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து