முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் பீகார் துணை முதல்வர்

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

பாட்னா : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாட்னா நீதிமன்றத்தில் பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
திருடர்கள் அனைவரின் பெயரிலும் மோடி என்ற பெயர் இருக்கிறது என்று ராகுல் காந்தி சமீபத்தில் பேசிய கருத்துக்கு எதிராக இந்த வழக்கை சுஷில் குமார் மோடி தொடர்ந்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்கள்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஏன் திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் மோடி என்று இருக்கிறது. நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி. இன்னும் எத்தனை மோடிக்கள் வருவார்களோ, யாருக்கு தெரியும் என்று பேசியிருந்தார்.

ராகுலின் இந்த பேச்சுக்கு, பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கண்டனம் தெரிவித்தார். பீகாரில் மோடி என்ற சமூகத்தனர் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களை புண்படுத்தும் வகையில் பேசாதீர்கள் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, பாட்னா தலைமை மாஜிஸ்திரேட் குமார் குஞ்சன் முன்னிலையில், ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனு வரும் 22-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து