எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பாராளுமன்றம் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்த தேர்தல் முடிவை இணையதளங்கள் மூலமும், மொபைல் ஆப் மூலமும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும் வாக்குகள் எண்ணிக்கையோடு, ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுவதால் இந்த முறை தேர்தல் முடிவுகள் வெளி வர காலதாமதமாகும்.
7 கட்டங்களாக...
நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி, கடந்த 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தலை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் போட்டியிட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்குகிறது.
பணிகள் தீவிரம்...
முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன. இதையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளை தேர்தல் ஆணையமும் தீவிரமாக செய்து வருகிறது.
முதல் சுற்று நிலவரம்...
நாடுமுழுவதும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 14 மேஜைகள் வரை போடப்பட்டு இருக்கும். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் ஆகியோர் அமர்ந்து ஓட்டுகளை எண்ணுவார்கள். ஒவ்வொரு மேஜைக்கு அருகிலும் அமர்ந்திருக்கும் வேட்பாளர்களின் முகவர்களிடம், மின்னணு எந்திரங்களை காட்டிய பின்னரே ஓட்டு எண்ணும் பணி நடைபெறும். காலை 9 மணி அளவிலும் முதல் சுற்று நிலவரம் தெரியவரும் என்றும், மதியம் 1 மணி வாக்கில் எந்த கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளது என்பதும் தெரியவந்து விடும்.
சற்று தாமதமாகும்...
வாக்கு எண்ணிக்கையில் போது ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் பணியும், நடைபெறும் என்பதாலும், 10 சதவீதம் அளவுக்கு சரி பார்த்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும் என்பதாலும், இறுதி முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படுமென அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனாலும் இன்று இரவுக்குள் ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்படும். தமிழகத்தை பொறுத்த வரை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையுடன் 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.
45 மையங்களில்...
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்றம் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, தமிழ்நாடு முழுவதும் 45 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 19 கம்பெனிகள் கொண்ட மத்திய போலீஸார் 1,520 பேரும், 62 கம்பெனிகள் கொண்ட தமிழ்நாடு ஆயுதப்படை போலீசார் 4,960 பேரும், தமிழ்நாடு போலீசார் 36 ஆயிரம் பேரும் என 45ஆயிரம் போலீசாரின் பாதுகாப்புடன் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணிக்கை நடைபெறும். இதனிடையே மின்னணு வாக்கு இயந்திரங்களின் வாக்குகளும் எண்ணப்படும்.
30 நிமிடத்தில் வெளியீடு...
ஒவ்வொரு ரவுண்டு ஓட்டு எண்ணிக்கையின் முடிவுகளும் 30 நிமிடத்தில் வெளியிடப்படும். ஓட்டு எண்ணிக்கை அனைத்தும் அந்தந்த மாவட்ட அதிகாரிகளின் மூலம் வீடியோ பதிவு செய்யப்படும். 4,014 வெப் காமிராக்கள் மூலமும் வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகள் பதிவு செய்யப்படும். ஓட்டு எண்ணிக்கைக்கு தேர்தல் கமிஷன் தயார் நிலையில் உள்ளது. ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அனைத்தையும் கண்காணிக்க 88 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்களின் முன்னிலையில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அவர்களது அனுமதியோடு அந்தந்த தேர்தல்அதிகாரிகள் தேர்தல் முடிவுகளை வெளியிடுவார்கள்.
சிறப்பு ஏற்பாடுகள்...
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதனை நேரடியாக தெரிந்து கொள்வதற்காக தேர்தல் முடிவுகள் மற்றும் அதற்கான டிரண்டுகளை தேர்தல் ஆணையத்தின் http:\\results.eci.gov.in, http:\\elections.tn.gov.in|results2019 ஆகிய இணையதளங்களில் நேரடியாக தெரிந்து கொள்ளலாம். இவற்றை தவிர தலைமை செயலகத்திலும் மக்கள் தொடர்பு அதிகாரிகள் மூலமும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செல்போன் மூலமும் தெரிந்து கொள்வதற்காக voter help line mobile app அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை play store-ல் டவுன்லோடு செய்து அறிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி தி.மு.க.வில் இணைந்தார்
03 Dec 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி தி.மு.க.வில் இணைந்தார்.
-
என்னை கொல்ல முயற்சி: பாக்., ராணுவம் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு
03 Dec 2025இஸ்லாமாபாத், என்னை கொல்ல பாகிஸ்தான் ராணுவம் முயல்வதாக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-03/12/2025
03 Dec 2025 -
தேர்தல் ஆணையத்தை கண்டித்து மன்சூர் அலிகான் உண்ணாவிரத போராட்டம்
03 Dec 2025சென்னை : தேர்தல் ஆணையத்தை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஈடுபட்டுள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: அமித்ஷா மீது மம்தா குற்றச்சாட்டு
03 Dec 2025கொல்கத்தா, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு அமித்ஷா தான் காரணம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
-
தாழ்வுப்பகுதியாக வலுவிழந்து மண்டலம்: இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
03 Dec 2025சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்துள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனம
-
புதுச்சேரி முதல்வருடன் த.வெ.க. பொதுச்செயலாளர் மீண்டும் சந்திப்பு
03 Dec 2025புதுவை : புதுச்சேரி முதல்வருடன் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீண்டும் சந்தித்து பேசினார்.
-
கார்த்திகை தீபத்திருவிழா: சுவாமிமலையில் தேரோட்டம்
03 Dec 2025சுவாமிமலை : கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலையில் தேரோட்டம் நடைபெற்றது.
-
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றியமைப்பு
03 Dec 2025டெல்லி : பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றியமைக்கப்பட்டு புதிய உறுப்பினர்களின் பெயர்களை பட்டியலிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை சரிவு
03 Dec 2025சென்னை : சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.
-
சஞ்சார் சாதி செயலி: ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு
03 Dec 2025டெல்லி : சஞ்சார் சாதி செயலியால் மத்திய அரசுக்கு ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
மதுரை அருகே சோகம்: டீக்கடையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
03 Dec 2025மதுரை : மதுரை அருகே உள்ள வாடிப்பட்டியில் வாடிக்கையாளர்களை கவர சீரியல் பல்பு தொங்க விட்ட டீக்கடையில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
-
கம்ப்யூட்டரை ‘ஆன்' செய்யாமல் துணை முதல்வர் ஆய்வு செய்தாரா? - தமிழக அரசு விளக்கம்
03 Dec 2025சென்னை : மழை பாதிப்பு புகார் மீதான நடவடிக்கைக்கு கம்ப்யூட்டரை ஆன் செய்யாமல் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
-
மும்பை விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்
03 Dec 2025மும்பை : மும்பை விமான நிலையத்தில் உயரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.
-
மாலியில் கடத்தப்பட்ட ஐந்து இந்தியர்களை மீட்க வேண்டும்: கனிமொழி எம்.பி. கோரிக்கை
03 Dec 2025புதுடெல்லி, ஆப்பிரிக்காவில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 5.5 கோடி பேர் பாதிப்பு
03 Dec 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் தற்போது 3-வது பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
ரஷ்ய கப்பல்கள் மீது தாக்குதல்: உக்ரைனுக்கு புதின் கடும் எச்சரிக்கை
03 Dec 2025மாஸ்கோ : உக்ரைன் துறைமுகங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதை அடுத்து ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து உயர்வு
03 Dec 2025சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
மாயமான மலேசிய விமானம்: 10 ஆண்டுகளுக்கு பிறகு தேடும் பணி வரும் 30-ம் தேதி மீண்டும் தொடக்கம்
03 Dec 2025கோலாலம்பூர் : 10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை மீண்டும் தேடும் பணி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
-
கார்த்திகை தீபத்திருவிழா: பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
03 Dec 2025பழனி : கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் பரணி தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது
-
வங்காளதேசத்தை சேர்ந்த கர்ப்பிணிப்பெண் இந்தியாவுக்குள் நுழைய மனிதாபிமான அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் அனுமதி
03 Dec 2025புதுடெல்லி, வங்காளதேசத்தில் இருந்து கர்ப்பிணிப்பெண்கள் இந்தியாவுக்குள் நுழைய மனிதாபிமான அடிப்படை வழங்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பா?
03 Dec 2025சென்னை : திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வெனிசுலா மீது விரைவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
03 Dec 2025வாஷிங்டன் வெனிசுலாவுக்குள் புகுந்து விரைவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
-
தங்கம், வெள்ளி விலை உயர்வு
03 Dec 2025சென்னை : தங்கம் விலை நேற்றும்அதிகரித்து விற்பனையானது.
-
டி-20 தொடருக்கு கில் ரெடி?
03 Dec 2025மும்பை : காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவாரா இல்லையா என சந்தேகம் எழுந்த நிலையில் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தயாராக உள்ளதாக தகவ


