எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி : அசாமிலிருந்து 13 பேருடன் மாயமான இந்திய விமானப் படை விமானத்தின் பாகங்கள் அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானம் கண்டுபிடிக்கப்பட்டதை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.
அசாம் மாநிலம் ஜோர்காட்டிலிருந்து அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மேற்கு சியாங் மாவட்டத்துக்கு இந்திய விமானப் படையின் ஏ.என் - 32 ரக விமானம், கடந்த 3-ம் தேதி மதியம் புறப்பட்டது. இந்த விமானம், இந்திய விமானப் படையில் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. விமானத்தில் 13 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட அரை மணி நேரம் வரை கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்தது. அதற்கு பின் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இது குறித்த தகவல் விமானப் படை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சுகோய் - 30 ரக போர் விமானம் உள்ளிட்ட இந்திய விமானப் படை விமானங்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. மேலும் ராணுவம், மலைவாழ் மக்கள் உள்ளிட்டோர் உதவியுடனும் தேடுதல் பணி நடந்தது. மோசமான வானிலை காரணமாக விமானத்தை தேடும் பணி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 8 நாட்களுக்கு பின்னர் மாயமான விமானத்தின் உதிரி பாகங்கள் அருணாச்சல பிரதேச மாநிலம் லிபோ என்ற பகுதியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது 12 ஆயிரம் அடி உயரம் உள்ளது. மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை இந்திய விமானப்படையும் உறுதி செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |