முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மல்லையா மேல்முறையீடு செய்ய அனுமதியளித்தது லண்டன் கோர்ட்

புதன்கிழமை, 3 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : ரூ. 9 ஆயிரம் கோடி வங்கி மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதால் அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வருவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கிய விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனபது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி தொடங்கியது. இந்த வழக்கின் விசாரணையில் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா, லண்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும் ஒரு வாரத்திற்குள் எழுத்து மூலமாக அவர் புதிதாக விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அவர் தாக்கல் செய்த விண்ணப்பித்தின் மீது நேற்று நீதிபதிகள் ஜார்ஜ் லெக்காட், ஆண்ட்ரூ போப்பிள்வெல் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு முன்பு விரிவான விசாரணை நடைபெற்றது. விஜய் மல்லையா சார்பில் அவரது வழக்கறிஞர்களும் இந்திய அரசு சார்பில் வழக்கறிஞர்களும் கூடுதல் வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட லண்டன் ராயல் நீதிமன்றம், நாடு கடத்தும் உத்தரவிற்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு வழக்கு தொடர அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து