எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கடலில் கலக்கும் வெள்ள உபரி நீரை சேமிக்க காவிரி ஆற்றின் குறுக்கே 5 தடுப்பணைகள் கட்டப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்,
குடிமராமத்து பணிகள் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித்துணைத் தலைவர் துரைமுருகன் மற்றும் தி.மு.க. உறுப்பினர் கே.என்.நேரு ஆகியோருக்கு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த பதில் வருமாறு:-
குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2016-2017 ஆம் ஆண்டில் 30 மாவட்டங்களில் 1,519 பணிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த 10.3.2017-ல் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் ஏரியில் குடிமராமத்துப் பணிகளை துவக்கி வைத்தேன். இக்குடிமராமத்துப் பணிகளில் விவசாய சங்கங்கள் அல்லது பாசன சபைகள் அல்லது ஆயக்கட்டுதாரர் மற்றும் ஆயக்கட்டுதாரர்களின் தொகுப்பினர் பணத்தட்டுப்பாடின்றி ஆரம்ப கட்ட பணிகளை தொடங்குவதற்கும், பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு முடிக்கவும் ஏதுவாக ஒப்பந்த மதிப்பில் 15 விழுக்காட்டினை முன்பணமாக வழங்கவும் அதனை 3 தொடர் பட்டியல்களில் பிடித்தம் செய்யவும் 29.10.2018 அன்று அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
நீர்வள ஆதாரத் துறையின் 15 வட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் குடிமராமத்துப் பணிகள் ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டன. 2019-2020 ஆம் ஆண்டில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 1,829 குடிமராமத்துப் பணிகளுக்கு 499.688 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பணிகள் துவங்கப்பட்டு முன்னேற்றத்தில் உள்ளன. இத்திட்டத்தினை கண்காணித்து செயல்படுத்த பாலாஜி, ஐ.ஏ.எஸ். சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 8 ஓய்வுபெற்ற பணியிலுள்ள பொறியாளர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் குழுக்களை அமைத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பணிகளை தொய்வின்றி செயல்படுத்த மாவட்ட அளவிலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவேரி ஆறு கர்நாடகாவில் உள்ள குடகு மலையில் தலைக்காவிரி என்னும் இடத்தில் ஆரம்பித்து 320 கி.மீ தூரத்தில் தமிழக எல்லையில் மஞ்சகொண்டப்பள்ளி என்ற இடத்தில் வந்தடைகிறது. அதன்பின் தமிழகத்தில் 77 கி.மீ பயணித்து மேட்டூர் அணையை வந்தடைகிறது. தமிழ்நாட்டில் மேட்டூரிலிருந்து ஆரம்பித்து 338 கி.மீ தூரம் பயணித்து நாகை மாவட்டம் பூம்புகார் கிராமத்தில் கடலில் கலக்கும் இடம் வரை கீழ்க்கண்ட கட்டமைப்புகளின் மூலம் வெள்ள உபரிநீர் சேமிக்கப்படுகிறது.
மின்சார வாரியத்தால் கட்டப்பட்டுள்ள ஏழு தடுப்பணைகள் மூலம் 3.88 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் மாயனூர் கதவணையின் மூலம் 1.04 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு தடுப்பணையின் மூலம் 0.25 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணையின் மூலம் 0.27 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அணைக்கரை தடுப்பணையின் மூலம் 0.83 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. காவேரி ஆறு மற்றும் கொள்ளிடத்தில் மேற்கண்ட கட்டமைப்புகள் மூலம் மொத்தம் 6.27 டி.எம்.சி வெள்ள மிகைநீர் சேமிக்கப்படுகிறது. மேலும் கொள்ளிடம் ஆற்றில் நாகை மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு இடையே ஆதனூர் ¬- குமாரமங்கலம் என்ற இடத்தில் தடுப்பணை அமைக்க ரூ. 428.00 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 0.32 டி.எம்.சி வெள்ள மிகைநீர் சேமிக்கப்படும்.
கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு இடையே நஞ்சை புகளூர் கிராமத்தில் காவேரியின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்கு ஆய்வு முடிக்கப்பட்டு விபர மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 0.5 டி.எம்.சி வெள்ள மிகைநீரை சேமிக்க இயலும். மேலும் காவேரி ஆற்றின் குறுக்கே கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கிடையே ஒருவந்தூர் கிராமத்திலும், கரூர் மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு இடையே முசிறி கிராமத்திலும் கதவணை அமைக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கிடையே தூத்தூர் - வாழ்க்கை கிராமத்திலும், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கிடையே கருப்பூர் - மாதிரி வேலூர் கிராமத்திலும் மற்றும் அளக்குடி கிராமத்திலும் தடுப்பணை அமைக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆக மொத்தம் ஐந்து தடுப்பணைகள் கட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் 1.80 டி.எம்.சி வெள்ள மிகை நீரை சேமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
24 Oct 2025சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி
24 Oct 2025உளுந்தூர்பேட்டை: சேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கிறார் விஜய்
24 Oct 2025சென்னை: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
துபாயில் இந்திய மாணவர் உயிரிழப்பு
24 Oct 2025துபாய்: துபாய் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் துவக்கம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
என்றும் மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
24 Oct 2025சென்னை: மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
24 Oct 2025புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: வங்கக்கடலில் அக். 27-ம் தேதி உருவாகிறது 'மோந்தா' புயல் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
24 Oct 2025சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
24 Oct 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து அங்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்க
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Oct 2025சென்னை: போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
24 Oct 2025சென்னை, முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
குண்டு வைக்க சதி: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
24 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன்? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்கு
24 Oct 2025பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
24 Oct 2025டெல்லி: டெல்லியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வெள்ளிக்கிழமை காலை நான்கு பள்ளிகளுக்கு வந்த மின்னஞ்சல்களால் பரபரப்பு நிலவியது.
-
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Oct 2025கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்ச
-
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்குள் போட்டி
24 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்டியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
24 Oct 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தி.மலை நீர் நிலைகளிலும், மலைப்பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
24 Oct 2025சென்னை: மலைப் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பீகாரில் என்.டி.ஏ. ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமாரால் முதல்வராக முடியாது தேஜஸ்வி யாதவ் பிரச்சாரம்
24 Oct 2025பாட்னா: என்.டி.ஏ.


