எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : கடலில் கலக்கும் வெள்ள உபரி நீரை சேமிக்க காவிரி ஆற்றின் குறுக்கே 5 தடுப்பணைகள் கட்டப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்,
குடிமராமத்து பணிகள் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித்துணைத் தலைவர் துரைமுருகன் மற்றும் தி.மு.க. உறுப்பினர் கே.என்.நேரு ஆகியோருக்கு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த பதில் வருமாறு:-
குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2016-2017 ஆம் ஆண்டில் 30 மாவட்டங்களில் 1,519 பணிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த 10.3.2017-ல் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் ஏரியில் குடிமராமத்துப் பணிகளை துவக்கி வைத்தேன். இக்குடிமராமத்துப் பணிகளில் விவசாய சங்கங்கள் அல்லது பாசன சபைகள் அல்லது ஆயக்கட்டுதாரர் மற்றும் ஆயக்கட்டுதாரர்களின் தொகுப்பினர் பணத்தட்டுப்பாடின்றி ஆரம்ப கட்ட பணிகளை தொடங்குவதற்கும், பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு முடிக்கவும் ஏதுவாக ஒப்பந்த மதிப்பில் 15 விழுக்காட்டினை முன்பணமாக வழங்கவும் அதனை 3 தொடர் பட்டியல்களில் பிடித்தம் செய்யவும் 29.10.2018 அன்று அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
நீர்வள ஆதாரத் துறையின் 15 வட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் குடிமராமத்துப் பணிகள் ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டன. 2019-2020 ஆம் ஆண்டில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 1,829 குடிமராமத்துப் பணிகளுக்கு 499.688 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பணிகள் துவங்கப்பட்டு முன்னேற்றத்தில் உள்ளன. இத்திட்டத்தினை கண்காணித்து செயல்படுத்த பாலாஜி, ஐ.ஏ.எஸ். சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 8 ஓய்வுபெற்ற பணியிலுள்ள பொறியாளர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் குழுக்களை அமைத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பணிகளை தொய்வின்றி செயல்படுத்த மாவட்ட அளவிலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவேரி ஆறு கர்நாடகாவில் உள்ள குடகு மலையில் தலைக்காவிரி என்னும் இடத்தில் ஆரம்பித்து 320 கி.மீ தூரத்தில் தமிழக எல்லையில் மஞ்சகொண்டப்பள்ளி என்ற இடத்தில் வந்தடைகிறது. அதன்பின் தமிழகத்தில் 77 கி.மீ பயணித்து மேட்டூர் அணையை வந்தடைகிறது. தமிழ்நாட்டில் மேட்டூரிலிருந்து ஆரம்பித்து 338 கி.மீ தூரம் பயணித்து நாகை மாவட்டம் பூம்புகார் கிராமத்தில் கடலில் கலக்கும் இடம் வரை கீழ்க்கண்ட கட்டமைப்புகளின் மூலம் வெள்ள உபரிநீர் சேமிக்கப்படுகிறது.
மின்சார வாரியத்தால் கட்டப்பட்டுள்ள ஏழு தடுப்பணைகள் மூலம் 3.88 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் மாயனூர் கதவணையின் மூலம் 1.04 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு தடுப்பணையின் மூலம் 0.25 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணையின் மூலம் 0.27 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அணைக்கரை தடுப்பணையின் மூலம் 0.83 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. காவேரி ஆறு மற்றும் கொள்ளிடத்தில் மேற்கண்ட கட்டமைப்புகள் மூலம் மொத்தம் 6.27 டி.எம்.சி வெள்ள மிகைநீர் சேமிக்கப்படுகிறது. மேலும் கொள்ளிடம் ஆற்றில் நாகை மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு இடையே ஆதனூர் ¬- குமாரமங்கலம் என்ற இடத்தில் தடுப்பணை அமைக்க ரூ. 428.00 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 0.32 டி.எம்.சி வெள்ள மிகைநீர் சேமிக்கப்படும்.
கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு இடையே நஞ்சை புகளூர் கிராமத்தில் காவேரியின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்கு ஆய்வு முடிக்கப்பட்டு விபர மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 0.5 டி.எம்.சி வெள்ள மிகைநீரை சேமிக்க இயலும். மேலும் காவேரி ஆற்றின் குறுக்கே கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கிடையே ஒருவந்தூர் கிராமத்திலும், கரூர் மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு இடையே முசிறி கிராமத்திலும் கதவணை அமைக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கிடையே தூத்தூர் - வாழ்க்கை கிராமத்திலும், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கிடையே கருப்பூர் - மாதிரி வேலூர் கிராமத்திலும் மற்றும் அளக்குடி கிராமத்திலும் தடுப்பணை அமைக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆக மொத்தம் ஐந்து தடுப்பணைகள் கட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் 1.80 டி.எம்.சி வெள்ள மிகை நீரை சேமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
டான் பிராட்மேன் போல... கில்லுக்கு ரவி சாஸ்திரி புகழாரம்
08 Jul 2025மும்பை : 0-1 என பின் தங்கியிருந்த இந்தியாவை டான் பிராட்மேன் போல விளையாடி சுப்மன் கில் தூக்கி நிறுத்தியதாக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
-
3-வது டெஸ்ட் போட்டி: பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும்: கவாஸ்கர்
08 Jul 2025லண்டன் : 3-வது டெஸ்ட் போட்டியில், பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
-
டெக்சாஸ் வெள்ளத்தில் 81 பேர் பலி
08 Jul 2025வாஷிங்டன் : டெக்சாஸ் ஏற்பட்ட வெள்ளத்தில் 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சி.எஸ்.கே. 3-வது இடத்துக்கு சரிந்தது: ஐ.பி.எல். பிராண்ட் மதிப்பில் ஆர்.சி.பி. அணிக்கு முதலிடம்
08 Jul 2025மும்பை : ஆர்.சி.பி. அணியின் பிராண்ட் மதிப்பு 227 மில்லியனாக இருந்து 269 மில்லியனாக அதிகரித்துள்ளது.
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை இறக்குமதி வரிக்கான கால அவகாசத்தை நீட்டித்த அமெரிக்கா
08 Jul 2025வாஷிங்டன் : இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான இறக்குமதி வரி விதிப்பு அமலாகும் கால அவகாசத்தை அமெரிக்க அரசு ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-07-2025.
09 Jul 2025 -
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவில் உற்சாக வரவேற்பு: மேளம் கொட்டி உற்சாகம்
09 Jul 2025விந்தோக், நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு மேளம் கொட்டி பிரதமர் மோடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.
-
ராஜஸ்தானில் கனமழைக்கு திறப்பதற்கு முன்பே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய சாலை
09 Jul 2025ராஜஸ்தான் : ராஜஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், புதிதாக அமைக்கப்பட்ட சாலை திறப்பதற்கு முன்பே அடித்து செல்லப்பட்டது.
-
கணவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார்: ‛கல்லுக்குள் ஈரம்'' நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
09 Jul 2025சென்னை : கணவர் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரை அடுத்து 1980-களில் பிரபலமாக இருந்த நடிகை அருணாவின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
ராஜஸ்தானில் பயங்கரம்: இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து - இருவர் பலி
09 Jul 2025ஜெய்பூர் : ராஜஸ்தானின் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.