முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஓரிரு மாவட்டங்களில் மிதமான மழைக்கும் நீலகிரி,கோவை, தேனி மாவட்டம் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும், தெற்கு மற்றும் உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஓரிரு மாவட்டங்களில் மிதமான மழைக்கும் நீலகிரி,கோவை, தேனி மாவட்டம் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும், தெற்கு மற்றும் உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையான பெரம்பலூரில் 8 செ.மீ. மழையும் வால்பாறையில் 7செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னையில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலையாக 37டிகிரியும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 28 டிகிரியாக இருக்க வாய்ப்புள்ளது.

குமரிக் கடல் பகுதியில் மணிக்கு 40-ல் இருந்து 50கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால், அடுத்த 24 மணி நேரத்தில் குமரிக் கடல் பகுதியில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து