எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் : உழவனாய் பிறந்து இன்று தன உழைப்பால் முதல்வர் எடப்பாடியார் உயர்ந்துள்ளார் என, தமிழக முதல்வரின் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு திட்ட முகாம் திறப்பு விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாராம் சூட்டினார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஏழை மக்களின் துயரங்களை தீர்க்க அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திட ஏதுவாக புதியதாக மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த திட்டத்தின்படி புறநகர் பகுதிகளில் அதிகாரிகள் கிராமம், கிராமமாக மக்களை தேடிச்சென்று அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அந்த மனுக்களை கம்ப்யூட்டரில் பதிந்து அந்த மனு மீது 1 மாதத்தில் நடவடிக்கை எடுத்து அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்று விழா நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்குவார்கள் என அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதன்முதலாக அந்த திட்டத்தை எடப்பாடி தொகுதியில் முதல்வர் நேற்று துவக்கினார். பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவில் பகுதியில் முதன் முதலில் மனுக்களை பெற்றுக்கொண்டார். பின் வனவாசி பகுதியில் அரசு பள்ளியில் விழா நடந்ததது. இந்த விழாவில் தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.
வருவாய்த்துறை மற்றும் பேரிடம் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.வி. உதயகுமார் முன்னிலை உரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது:-
உழவனாய் பிறந்து உழைப்பால் உயர்ந்தவர் எடப்பாடியார். மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற வழியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் மக்களிடம் ஆட்சியர்,வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மனுக்களை பெற்று நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் அம்மா, அம்மா திட்ட முகாம் என்ற திட்டத்தினையும் செயல்படுத்தினார். தற்போது அண்ணன் எடப்பாடியார் அதிகாரிகளை மக்களை தேடி சென்று மனுக்களை வாங்கும் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் மழை காலங்களில் ரிக்சா வண்டி ஒட்டுபவர்கள் மழையில் நனைந்தபடி வண்டி ஒட்டுவார்கள், உள்ளே இருப்பவர்கள் நனையாமல் இருப்பார்கள். அந்த நிலையை பார்த்த அவர் உடனடியாக அவர்களுக்கு மழை காலங்களில் மழை கோர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அதே போல் மதுரை, சேலம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறந்தாலே போதும் கள்ளி பால் ஊற்றி கொலை செய்யும் நிலை இருந்தது. அம்மா இதையறிந்து தொட்டில் குழந்தை என்னும் அற்புதமான திட்டத்தை கொண்டுவந்தார். இன்று பெண் சிசு கொலை தடுத்து நிறுத்தப்பட்டது.
அதை போல்தான் தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ள இந்த திட்டமும். இந்த திட்டம் மூலம் முதியோர் உதவி தொகை, பட்டா வழங்குதல், பொதுவார் பல ஆண்டுகள் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பார்கள் அவர்களுக்கு பட்டா இருக்காது. மேலும் நீர் நிலை புறம்போக்குகளில் இருப்பவர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பட்டா வழங்க கூடாது என்றிருப்பதால், அவர்களுக்கு எல்லாம் தனியார் நிலத்தை கூட வாங்கி பட்டா வழங்கி வீடு கட்டி தரவும், பட்டா இருந்தும் குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கு வீடு கட்டி தரவும் இந்த திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இது மிகவும் அற்புதமான திட்டமாகும். அண்ணன் எடப்பாடியார் ஆட்சிக்கு வந்ததும். இவர் அம்மா மாதிரி செயல்படுவாரா என்று கேட்டவர்கல் இன்று அவர் அம்மா வழியில் சிறப்பாக செயல்படுவதாக சொல்கிறார்கள்.
அத்திரவரதர் 40 ஆண்டுகளுக்கு பின் அவதரித்தார். 79-ல் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் 10 லட்சம் பேர் வரை அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இந்த முறை அத்திவரதர் சயன கோலத்தில் இருந்த போது நாள்தோறும் பல்லாயிர கணக்கான மக்கள் அவரை தரிசிக்க வந்தனர். கட்டுகடங்காத கூட்டம் வந்த போதும் உடனுக்குடன் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி அதை சமாளிக்க நடவடிக்கை எடுத்தார்.
மேலும் அங்கு வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுத்து முதன் முதலாக தானே நன்கொடையும் வழங்கினார். அத்திரவரதர் நின்ற கோலத்தில் இருந்த போதுதான் வரம் தருவார் என்ற செய்தி பரவியதும். கட்டுக்கடகாத கூட்டம் வருகை தந்தது இதையும் சமாளித்தார். அங்கே வந்த நிறைமாத கர்ப்பிணி பெண் அத்திவரதரை பார்த்து குழந்தை பெற்று அந்த குழந்தைக்கு அத்திவரதர் என்று பெயர் சூட்டும் அளவிற்கு சிறப்பான நடவடிக்கையை முதல்வர் மேற்கொண்டார். அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை கொண்ட திருப்பதிக்கு நாள் தோறும் 75 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசிக்க முடியும். ஆனால் அத்திவரதரை நாள்தோறும் லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் தரிசிக்கை அனைத்து ஏற்பாடுகளையும் முதல்வர் சிறப்பாக செய்திருந்தார்.
சேலம் மாவட்டம் மட்டுமே அறிந்திருந்த எடப்பாடியை இன்று தமிழகம், இந்தியா எங்கிலும் தெரிந்திட செய்துள்ளார். விரைவில் உலகெங்கும் இந்த எடப்பாடி தெரிய போகிறது. ஆம் தொழில் முதலீட்டை ஈர்க்க முதல்வர் லண்டன் மற்றும் அமெரிக்க செல்கிறார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் செல்கின்றனர். நிச்சயம் அதிலும் அவர் வெற்றி வாகை சூடுவார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மேட்டூர் செம்மலை, சேலம் மேற்கு ஜி.வெங்கடாஜலம், சேலம் தெற்கு ஏ.பி.சக்திவேல், ஓமலூர் வெற்றிவேல், சங்ககிரி ராஜா , சேலம் புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் இளங்கோழன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.
-
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.