முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு சட்டம் நீக்கப்படாது - மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி : வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு சட்டம் நீக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தின் துவக்க விழாவில் அமித்ஷா பேசியதாவது:-

வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 371-வது சட்டப்பிரிவில் மத்திய அரசு கை வைக்காது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு தற்காலிகமானது தான். ஆனால், சட்டப்பிரிவு 371-வது பிரிவு வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது. இரண்டு சட்டப்பிரிவுக்கும் வேறுபாடு உள்ளது. காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்த பிறகு, வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு சட்டத்தையும் மத்திய அரசு ரத்து செய்ய போவதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. சிறப்பு சட்டம் ரத்து செய்யப்படாது என பார்லிமென்டில் உறுதி அளித்தேன். தற்போது, வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த 8 முதல்வர்கள் முன்னிலையில், வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 371-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படாது என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து