முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண் பேட்டியால் பரபரப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ஒருவர் டி.வி. பேட்டியில் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.  

இங்கிலாந்து ராணி எலிசபெத், பிலிப் தம்பதியரின் இளைய மகன் ஆண்ட்ரூ (வயது 59). இவர் இளவரசர் சார்லஸ்சின் தம்பியும் ஆவார்.

இவர் சாரா என்ற பெண்ணை திருமணம் செய்து, 1996-ம் ஆண்டு பிரிந்து, விவாகரத்து செய்து விட்டார். 

அமெரிக்க பைனான்சியரும், நியூயார்க் சிறையில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டவருமான ஜெப்ரி எப்ஸ்டீன் மீது பாலியல் புகார் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியவர் வெர்ஜினியா கியுப்ரே (35). இவர் ராபர்ட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்த பெண், அமெரிக்க டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இவர் 2001-ம் ஆண்டு, தான் 17 வயது பருவப்பெண்ணாக இருந்தபோது இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக கூறினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜெப்ரி எப்ஸ்டீனின் தோழியான ஜிஸ்லைனே மேக்ஸ்வெல் என்னை பணிக்கு அமர்த்தினார். இந்த மேக்ஸ்வெல், இங்கிலாந்து பத்திரிகை அதிபர் ராபர்ட் மேக்ஸ்வெல்லின் மகள்.

நான் 2001-ம் ஆண்டு லண்டன் சென்றிருந்தேன். அங்கு கிளப் டிரேம்ப் என்ற இல்லத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டேன். அங்கே இளவரசர் ஆண்ட்ரூவை சந்தித்தேன். அவர் எனக்கு மது கொடுத்தார். அப்போது அங்கு ஜிஸ்லைனே மேக்ஸ்வெல்லும் உடன் இருந்தார்.

இளவரசர் ஆண்ட்ரூ என்னை அவர்களுடன் நடனம் ஆடும்படி கேட்டுக்கொண்டார் ஆடினேன். பின்னர் நான் ஜிஸ்லைனேவுடன் அவரது வீட்டுக்கு வந்து விட்டேன். 

வீட்டில் வைத்து ஜிஸ்லைனே, “அவர் (இளவரசர் ஆண்ட்ரூ) நமது வீட்டுக்கு வருகிறார். நீ ஜெப்ரி எப்ஸ்டீனுடன் என்ன செய்தாயோ அதை அவருடனும் செய்ய வேண்டும்” என்றார். அதன்பின்னர் ஆண்ட்ரூ அங்கு வந்தார். அவர் குளியலறையில் வைத்து என்னிடம் பாலியல் ரீதியில் அணுகினார். பின்னர் என்னை படுக்கை அறைக்கு அவர் அழைத்துச்சென்று செக்ஸ் உறவு வைத்துக்கொண்டார்.

அதே நேரம் அவர் என்னுடன் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவில்லை. அவர் நன்றி சொன்னார். மென்மையான உணர்வுகளை பகிர்ந்து கொண்டு அவர் சென்று விட்டார். என்னால் அதை நம்பவே முடியவில்லை.

இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று அவர் மறுக்கிறார். அவர் தொடர்ந்து மறுக்கத்தான் செய்வார். ஆனால் அவருக்கு உண்மை தெரியும். எனக்கும் உண்மை தெரியும். இவ்வாறு அவர் கூறினார். பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த குற்றச்சாட்டுகளை இளவரசர் ஆண்ட்ரூ மறுத்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து