எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வரும் 26,27-ந்தேதி தொடர்ந்து இரண்டு நாட்கள் வங்கிகள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவதால் தமிழகத்தில் 20000 ஏடிஎம் மையங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.350 லட்சம் கோடி மதிப்பு கொண்ட பொருளாதார நாடாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால் தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலை மத்திய அரசின் இலக்குக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துவிட்டது.
பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 30-ந்தேதி 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி 4 பெரிய வங்கிகளுடன் 6 சிறிய வங்கிகள் இணைக்கப்படுகின்றன.
இந்த இணைப்பு நடவடிக்கை காரணமாக நாட்டில் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைகிறது.
வங்கிகள் இணைப்புக்கு அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், “வங்கிகள் இணைப்பால் நிறைய பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். நாளடைவில் இது தனியார் மயத்துக்கு வழிவகுத்து விடும்” என்று தெரிவித்தனர்.
வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் என்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தின. ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக வருகிற 25-ந்தேதி நள்ளிரவு முதல் 27-ந்தேதி நள்ளிரவு வரை வேலை நிறுத்தம் செய்யப் போவதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எனவே வருகிற 26, 27-ந்தேதிகளில் (வியாழன், வெள்ளி) இரண்டு நாட்கள் வங்கி சேவைகள் அனைத்தும் முடங்கும். வங்கிகள் திறக்கப்பட்டாலும் எந்த ஊழியரும் பணியில் ஈடுபடமாட்டார்கள்.
அதற்கு பிறகும் மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் இருந்து கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் முதல் கட்ட போராட்டத்தை வெற்றிகரமாக மாற்றும் முயற்சிகளில் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்வதால் பண பரிவர்த்தனைகளில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். குறிப்பாக தானியங்கி எந்திரம் மூலம் பணம் பெறும் ஏ.டி.எம். சேவை வறண்டு விடும் நிலை உருவாகும். இது ஏ.டி.எம். சேவையை மட்டுமே நம்பி இருக்கும் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும்போது வங்கி அதிகாரி மேற்பார்வையில்தான் பணம் நிரப்பப்படும். 26, 27-ந்தேதிகளில் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்வதால் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் சேவைக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். நாளை (25-ந்தேதி) மாலையில் இருந்தே வங்கி அதிகாரிகள், ஏ.டி.எம். சேவை பணிகளை புறக்கணிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
எனவே வருகிற புதன் கிழமை ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்கப்படும் பணம் தான் வருகிற வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 2 நாட்களின் தேவையை சமாளிக்க வேண்டியதிருக்கும். ஆனால் ஏ.டி.எம். எந்திரங்களில் அதிக அளவு மக்கள் பணம் எடுக்கும் பட்சத்தில் வியாழக்கிழமையே ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லாத வறண்ட சூழ்நிலை ஏற்பட்டு விடும்.
இதன் தொடர்ச்சியாக வருகிற வியாழன், வெள்ளி இரு நாட்களும் ஏ.டி.எம். சேவை முடங்கும் அபாயம் உள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் 2 லட்சத்து 12 ஆயிரம் ஏ.டி.எம்.களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது நாடு முழுவதும் சுமார் ரூ.48 ஆயிரம் கோடி பணப் பரிவர்த்தனையை பாதிக்கும்.
தமிழ்நாட்டில் சுமார் 20 ஆயிரம் ஏ.டி.எம். சேவை வருகிற வியாழன், வெள்ளிக்கிழமைகளில் முடங்கும் என்று தெரிய வந்துள்ளது. சனி, ஞாயிற்றுகிழமைகளில் விடுமுறை என்பதால் வியாழன் முதல் ஞாயிறு வரை 4 நாட்களுக்கு தொடர்ச்சியாக வங்கி பணிகளும், ஏ.டி.எம். சேவைகளும் முடங்கும் அபாய நிலை உள்ளது.
தமிழ்நாட்டில் வருகிற வெள்ளிக்கிழமை சுமார் 20 ஆயிரம் ஏ.டி.எம்.களில் “சுத்தமாக பணம் இல்லை” என்ற நிலை ஏற்பட கூடும். இது தமிழ்நாட்டில் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பண பரிவர்த்தனையை பாதிக்கும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளில் ஒருவரான சேகரன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்
26 Dec 2025சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவல்: தமிழகத்தில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்: மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
26 Dec 2025சென்னை, கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கள்ளக்குறிச்சியில் ரூ.1,045 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
26 Dec 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பல்துறைகளின் சார்பில் 2,16,056 பயனாளிகளுக்கு ரூ.1,045 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு
-
உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
26 Dec 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள ஆசனூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கி
-
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி: நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க படை திடீர் தாக்குதல்
26 Dec 2025அபுஜா, நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க ராணுவம் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் மதவெறி ஆட்டத்துக்கு இடமில்லை: கள்ளக்குறிச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, எம்மதமும் சம்மதம் என்பதே தமிழ்நாடு. மதவெறி ஆட்டத்துக்கு இங்கு இடமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் மத நல்லிணக்கம் பா.ஜ.க.வின் கண்களை உறுத்துகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-12-2025.
26 Dec 2025 -
தமிழ்நாடு சட்டசபை ஜன. 20-ல் கூடுகிறது
26 Dec 2025சென்னை, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், 2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.
-
ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்
26 Dec 2025புதுடெல்லி, பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கதேசத்தில் நியாயமான தேர்தலுக்கு இந்தியா ஆதரவு: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
26 Dec 2025புதுடெல்லி, வங்காள தேசத்தில் நியாயமான தேர்தலை ஆதரிக்கிறது என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, அங்கு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரிய விஷயம
-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வேறொரு இந்தியா உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Dec 2025கள்ளக்குறிச்சி, இந்து பக்தர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் 'ரோஸ் மில்க்’ கொடுக்கின்றனர் என்று தெரிவித்த முதல்வர்மு.க.ஸ்டாலின், பா.ஜ.க.
-
கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகள்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, ரூ.10 கோடியில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளிட்ட கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
கனடாவில் இந்தியர் சுட்டுக்கொலை
26 Dec 2025ஒட்டாவா, கனடாவில் 20 வயது இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
நல்லகண்ணு பிறந்த நாள்: துணை ஜனாதிபதி வாழ்த்து
26 Dec 2025புதுடெல்லி, நல்லகண்ணு பிறந்த நாளை முன்னிட்டு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து வருபவர் என்றும் அவர்
-
அ.தி.மு.க.வில் விருப்பமனு பெற அவகாசம் டிச. 31-வரை நீட்டிப்பு
26 Dec 2025சென்னை, அ.தி.மு.க.வில் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சம்: வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 9,000 உயர்வு
26 Dec 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,03,120-க்கும் கிராமுக்கு ரூ.
-
விடுமுறை எதிரொலி: கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல்
26 Dec 2025திண்டுக்கல், விடுமுறை காரணமாக கொடைக்கானலில் தொடர்ந்து குவியும் சுற்றுலா பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும்: அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியீடு
26 Dec 2025கீவ், உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் (புதின்) அழிந்து போகட்டும் என்பதுதான்.
-
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி: ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் சரிவு
26 Dec 2025மெல்போர்ன், ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டது.
-
தமிழகத்தில் ஜனவரி 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
26 Dec 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தூத்துக்குடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
26 Dec 2025சென்னை, தூத்துக்குடியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.
-
வங்காள தேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக்கொலை
26 Dec 2025டாக்கா, வங்காள தேசத்தில், மேலும் ஒரு இந்து இளைஞர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
-
கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம்: தாய்லாந்து அரசு விளக்கம்
26 Dec 2025புதுடெல்லி, கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தாய்லாந்து விளக்கமளித்துள்ளது.
-
பீகாரைச் சேர்ந்த இளம் வீரர் சூரியவன்ஷிக்கு பால புரஸ்கார் விருது வழங்கினார் ஜனாதிபதி
26 Dec 2025புதுடெல்லி, இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு சிறார்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பால புரஸ்கார் விருது வழங்கி ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று (டிச.26)


