எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட இரண்டாவது நாளாக விருப்பமனுக்கள் பெறப்பட்டன.
அ.தி.மு.க அலுவலகத்தில் நாங்குநேரி - விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி மாநில இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று இரண்டாவது நாளாக விருப்பமனுக்கள் பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து வில்லன் நடிகர் ஜஸ்டினின் மகள் பபிதா அ.தி.மு.க அலுவலகத்திற்கு வந்தார். ரூ.25 ஆயிரம் வழங்கி அ.தி.மு.க வேட்பாளர் விருப்பமனு பூர்த்தி செய்து அக்கட்சி அலுவலக மேலாளர்கள் மகாலிங்கம் மற்றும் மனோகரனிடம் விண்ணப்பங்களை வழங்கினார்.
இதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த பபிதா, நடிகர் ஜஸ்டீன் எம்.ஜி.ஆரோடு திரைப்படங்களில் நடித்தது மட்டுமில்லாமல், கட்சி நிகழ்ச்சியில் அவருக்கு பாதுகாப்பு கொடுத்தவர். அவருடைய மகள் என்ற பெருமையுடன் நான் நாங்குநேரியில் எனக்கு போட்டியிட வாய்ப்பு கேட்கிறேன். முதல்வரும், துணைமுதல்வரும் எனக்கு அந்த வாய்ப்பை உறுதியாக தருவார்கள் என்று நம்புகிறேன். நாங்குநேரியில் போட்டியிட நான் விருப்பம் தெரிவித்ததன் காரணம் அங்கு பெரும்பான்மையான வாழும் நாடார் சமூகத்தை சேர்ந்தவள் என்பது தான் என்றார் அவர்.
இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக முன்னாள் எம்.எல்.ஏ., தாமரைக்கனியின் மகன் இன்பதமிழன், முன்னாள் எம்.பிக்கள் நாராயணன் பாளை முன்னாள் எம்.எல்.ஏ., தர்மலிங்கம் கேபிரியல் ஜெபராஜன், ராதாபுரத்தை சேர்ந்த கருப்புசாமி, குமரேசன்,யோசுவா, ரெட்டியார்ப்பட்டி நாராயணன் ஆகியோர் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன் சார்பில் விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் எம்.பி.லட்சுமணன் முன்னாள் கவுன்சிலர் பிரேமா. வி.எம்.குமார், ஆறுமுகம் ஆகியோரும் விருப்பமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகரில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட அம்மாநில அ.தி.மு.க துணைசெயலாளர் கணேசன் தனது விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளார். மூன்று தொகுதிகளிலும் மொத்தம் 100க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க வேட்பாளர்களாக போட்டியிட விருப்பமனுக்களை வழங்கியுள்ளனர். இந்த விருப்பமனுக்களை அ.தி.மு.க மகளிர் அணி மாநில செயலாளரும் முன்னாள் எம்.பியுமான விஜிலா சத்யானந்த், அ.தி.மு.க அலுவலக மேலாளர் மகாலிங்கம்துணை மேலாளர் மனோகரன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-
விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி மாநிலம் - காமராஜ் நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களான, கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் . ஆர். வைத்திலிங்கம், எம்.பி அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், இலக்கிய அணிச் செயலாளரும், செய்தித் தொடர்பாளரும், தமிழ் நாடு பாடநூல் நிறுவனத் தலைவருமான பா.வளர்மதி, கழக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் வேணுகோபால் ஆகியோர், தலைமைக் கழகத்தில் நேற்று மாலை அனைத்திந்திய அதிமுக வேட்பாளர்களாகப் போட்டியிட அனுமதி கோரி விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகளிடம் நேர்காணல் நடத்தினர். இதில், விருப்ப மனு அளித்துள்ள அ.தி.மு.கவினர் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்கு கீழே அடியுங்கள்: ராஜ் தாக்கரே
05 Jul 2025மும்பை : மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் என்ற ராஜ் தாக்கரே பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
எந்த காலக்கெடுவுக்கும் இந்தியா அஞ்சாது: ராகுலுக்கு பியூஷ் கோயல் பதிலடி
05 Jul 2025புதுடெல்லி, எந்த காலக்கெடுவுக்கும் அஞ்சி இந்தியா செயல்படாது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.
-
சுற்றுப்பயணத்திற்கான கட்சிப் பாடல், லோகோவை வெளியிட்டார் இ.பி.எஸ்.
05 Jul 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்துக்கான பாடல் மற்றும் லோகோ அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.
-
சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை பொதுமக்கள் இன்று பார்க்கலாம்
05 Jul 2025சென்னை : சர்வதேச விண்வெளி மையத்தை இன்று இரவு 8 மணிக்கு முதல் 8.06 மணி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பார்க்கலாம
-
கும்பாபிஷேக விழா: திருச்செந்தூரில் எஸ்.பி. ஆய்வு
05 Jul 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு நடத்தினார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.