எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : வியாபாரிகள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெங்காயத்தை இருப்பு வைக்கக் கூடாது என்றும், பதுக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, காமராஜ் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தலைமை செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, காமராஜ் ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது,
வெங்காயம் விலை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம். இன்னும் இரண்டு நாட்களுக்குள் ஒரு நல்ல செய்தி முதல்வர், துணை முதல்வரின்ஆலோசனையின்படி வெளிவரும். மழைக் காலங்களான நவம்பர் - டிசம்பர் மாதங்களில் வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதால் விலை உயர்ந்து இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. தற்போது நடைபெற்ற கூட்டத்தில் வெங்காய விலை குறைப்பது குறித்தும், பதுக்கல் செய்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இருந்த விலையைக் காட்டிலும் தற்போது 4 ரூபாய் குறைந்துள்ளது. மக்களை பாதுகாப்பதில் எந்த அளவுக்கு அரசு செயல்படுகிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும். 2010-ல் வெங்காய விலை 110 மற்றும் 140 என இருந்தது. அன்றைக்கு தி.மு.க. ஆட்சி இருந்தது. அன்றைய ரூபாய் மதிப்பு எவ்வளவு. இன்றைக்கு ரூபாய் மதிப்பு எவ்வளவு. இதனை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நாங்கள் அப்படியில்லை. 2011-ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, விலை நிலைபடுத்தும் நிதியத்தை ஏற்படுத்தியிருந்தார். அந்த நிதியம் மூலமாக வெங்காயத்தை குறைந்த விலைக்கு தர வேண்டும் என்று ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதன் மூலம் வெங்காய விலை கட்டுப்படுத்தப்பட்டது. அதே போல ஜெயலலிதா வாரிசாக இருக்கின்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களை அழைத்து ஆலோசனை செய்துள்ளார். அந்த ஆலோசனையில் அடிப்படையில் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும். பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகளில் வெங்காயம் விலை 33 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. நாசிக்கில் இருந்து கொள்முதல் செய்வது தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். குஜராத்தில் மழை பெய்து வருவதால் வெங்காய வரத்து குறைவாக உள்ளது. மற்ற இடங்களிலிருந்தும் வரத்து குறைவாக உள்ளது. இது போன்ற நிலையில் நாம் எப்படி செயல்படலாம் என்பது குறித்து ஆலோசனை செய்துள்ளோம். தேவையான அளவுக்கு கையிருப்பு உள்ளது. நாசிக் வெங்காயத்தை வெளியில் 60 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். இதனை நாங்கள் குறைவான விலைக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்தார்.
தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியதாவது,
மாவட்ட வழங்கல் அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் பல பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். சில்லரை வியாபாரிகள் 10 மெட்ரிக் டன் வெங்காயம்தான் வைத்துக் கொள்ளவேண்டும். மொத்த வியாபாரிகள் 50 மெட்ரிக் டன் வெங்காயம்தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று என்ற உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைக்கு ரூ. 4 விலை குறைந்துள்ளது. முதல்வர் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் நாசிக் சென்றுள்ளார்கள். அங்கிருந்து வெங்காயத்தை வரவைப்பதா, அல்லது கர்நாடகத்திலிருந்து வரவைப்பதா என்று ஆலோசனை செய்து முதல்வரிடம் தெரிவிப்போம். இன்னும் இரண்டு நாட்களில் இது குறித்து நல்ல அறிவிப்பு வெளிவரும். இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் உச்சம் : ஒரு பவுன் ரூ.97,000-ஐ கடந்தது
17 Oct 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-10-2025.
17 Oct 2025 -
அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டி
-
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
17 Oct 2025சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
-
அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
17 Oct 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மாணவி பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
விஜய் கூட்ட நெரிசல் துயரம்: சி.பி.ஐ. குழுவினர் கரூர் வருகை
17 Oct 2025கரூர் : விஜய் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக பிரவீன்குமார் ஐ.பி.எஸ் தலைமையிலான சி.பி.ஐ குழு நேற்று கரூர் வந்தது.
-
தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி
17 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
இன்று 9 மாவட்டங்களில் கனமழை
17 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
-
ஜி.டி.நாயுடு பாலத்தில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
17 Oct 2025சென்னை : ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
-
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை
17 Oct 2025புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
தீபாவளி பண்டிகையை கோவாவில் கடற்படை வீரர்களுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டம்
17 Oct 2025புதுடெல்லி : இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
17 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்கள
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி
17 Oct 2025பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
-
நெல் கொள்முதல் விவகாரம்: இ.பி.எஸ். குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
17 Oct 2025சென்னை : நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என்று இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
-
விமான உணவில் கிடந்த முடி: பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட் உத்தரவு
17 Oct 2025சென்னை, விமான உணவில் முடி இருந்ததை முன்னிட்டு பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஹங்கேரியில் விரைவில் புதினுடன் 2-வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
17 Oct 2025வாஷிங்டன், புதினுடன் அலாஸ்காவில் சந்தித்து பேசிய நிலையில், 2-வது பேச்சுவார்த்தை ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Oct 2025மதுரை : தமிழகம் முழுவதும் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணவ படுகொலையை தடுக்க புதிய ஆணையம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
17 Oct 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடக்கம்: ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதி
17 Oct 2025புதுடெல்லி, : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐ.ஆர்.சி.டி.சி.
-
துணை ஜனாதிபதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Oct 2025சென்னை : துணை ஜனாதிபதி, முன்னாள் தலைமை செயலாளர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. கைது : ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்
17 Oct 2025சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சி.பி.ஐ., அவரிடம் இருந்து ரூ.
-
இனி சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம்: போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை
17 Oct 2025சென்னை, சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தினமும் ஆயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் : சட்டசபையில் இ.பி.எஸ். வலியுறுத்தல்
17 Oct 2025சென்னை : நெல்கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
சத்தீஸ்கரில் 208 நக்சலைட்டுகள் சரண்
17 Oct 2025சத்தீஸ்கர் : 208 நக்சலைட்டுகள் ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்து சரண் அடைந்தனர்.