எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆக்லாந்து : ஆக்லாந்தில் நடைபெற்ற கடைசி டி - 20 போட்டி டையில் முடிவடைய சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது.
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி - 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தன. ஐந்தாவது மற்றும் கடைசி டி - 20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. மழை பெய்ததால் ஆட்டம் 11 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் கொலின் முன்ரோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மார்ட்டின் கப்தில் 20 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொலின் முன்ரோ 21 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 46 ரன்கள் குவித்தார். செய்பெர்ட் 19 பந்தில் ஒரு பவுண்டரி, ஐந்து சிக்சருடன் 39 ரன்கள் விளாச, நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்தது. பின்னர் 66 பந்தில் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் பாண்ட்டன் 7 ரன்னிலும், அடுத்து வந்த வின்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாட விரும்பிய மோர்கன் 7 பந்தில் 17 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோவ் 18 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 47 ரன்கள் சேர்த்தார். சாம் குர்ரான் 11 பந்தில் 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சவுத்தி இந்த ஓவரில் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
இதனால் கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. 11-வது ஓவரை நீசம் வீசினார். முதல் இரண்டு பந்தில் மூன்று ரன்கள் எடுத்தனர். 3 - வது பந்தில் டாம் குர்ரான் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணிக்கு கடைசி 3 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது. ஜோர்டான் களம் இறங்கினார். 4 - வது பந்தை நீசிம் ஆப்-ஸ்டம்பிற்கு வெளியே புல் டாஸ் ஆக வீசினார். இதை சிக்சருக்கு தூக்கினார் ஜோர்டான். இதனால் இங்கிலாந்து அணிக்கு 2 பந்தில் ஏழு ரன்கள் தேவைப்பட்டது. இந்த போட்டி 50 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போன்று ‘டை’ முடியுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் அடித்தார் ஜோர்டார். கடைசி பந்தில் பவுண்டரி அடித்தால் ‘டை’, சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி பந்தை பவுண்டரியாக அடித்தார் ஜோர்டார். இதனால் போட்டி ‘டை’யில் முடிந்தது. ஆட்டம் ‘டை’யில் முடிந்ததால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. பேர்ஸ்டோவ், மோர்கன் ஆகியோர் களம் இறங்கினர். பேர்ஸ்டோவ் 3 பந்தில் ஒரு சிக்சருடன் 8 ரன்களும், மோர்கன் 3 பந்தில் ஒரு சிக்சருடன் 9 ரன்களும் அடித்தனர். இதனால் இங்கிலாந்து 17 ரன்கள் அடித்தது. பின்னர் 18 ரன்கள் அடித்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் நியூசிலாந்து செய்பெர்ட், கப்தில் ஆகியோர் களம் இறங்கினர். நியூசிலாந்து அணியால் 8 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று டி - 20 தொடரை 3-2 எனக்கைப்பற்றியது. இந்த போட்டி 50 உலகக்கோப்பை தொடரை ஞாபகப்படுத்தியது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. பின்னர் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் டை ஆனதால், பவுண்டரிகள் அதிகம் அடித்த அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது என்பது புறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
பீகார் தேர்தலில் தொகுதிப் பங்கீடு: ஆர்.ஜே.டி. 135, காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டி
14 Oct 2025புதுடெல்லி : பீகார் தேர்தலில் தொகுதிப் பங்கீடில் ஆர்.ஜே.டி. 135, காங். 61 இடங்களில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மனிதராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர்: சி.வி.சண்முகத்திற்கு அமைச்சர் கண்டனம்
14 Oct 2025சென்னை : மனிதராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம் என்று அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
14 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம
-
மாநில திட்டக் குழுவின் 4 அறிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
14 Oct 2025சென்னை : மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
-
சட்டசபையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திடீர் போராட்டம்
14 Oct 2025சென்னை : சட்டசபையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு திடீர் பரபரப்பு நிலவியது.
-
அரசுக்கு எதிராக போராட்டம்: மடகாஸ்கர் அதிபர் தப்பி ஓட்டம்
14 Oct 2025அண்டனானரீவோ, மடகாஸ்கரில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் அதிபர் தப்பி ஓடினார்.
-
ரூ.95 ஆயிரத்தை நெருங்கிய ஒரு பவுன் தங்கம் விலை : ஒரேநாளில் ரூ.1,960 உயர்வு
14 Oct 2025சென்னை : 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (அக்.14) பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்து மீண்டும் அதிர்ச்சியளித்துள்ளது.
-
சாதி பெயர்களில் மாற்றம் வேண்டும்: முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை
14 Oct 2025சென்னை : சாதி பெயர்களில் மாற்றம் வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
14 Oct 2025புதுடெல்லி : டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
அண்டை நாடுகளுடனும் மகிழ்ச்சியாக உள்ளோம்: ஆப்கன் அமைச்சர் பேச்சு
14 Oct 2025புதுடெல்லி, பாகிஸ்தானை தவிர அண்டை நாடுகளுடனும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று வெளியுறவு மந்திரி அமீர் கான் முத்தகி பேசினார்.
-
ஆந்திராவில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏ.ஐ. மையம்: கூகுள் நிறுவனம் தகவல்
14 Oct 2025விசாகப்பட்டினம், ஆந்திராவில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏ.ஐ. மையம் அமைக்க உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
கரூர் சம்பவம்: ஆவணங்களை சமர்ப்பித்தது எஸ்.ஐ.டி.
14 Oct 2025சென்னை : கரூர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து ஆவணங்களை சமர்ப்பித்தது எஸ்.ஐ.டி.
-
ஓட்டுநர் தேர்வு தானியங்கி மையங்கள் அமைக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து
14 Oct 2025சென்னை : தமிழ்நாட்டில் ஓட்டுநர் தேர்வு தானியங்கி மையங்கள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
கர்நாடக முதல்வர் சித்தராமையா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
14 Oct 2025பெங்களூரு : கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்
-
6 நாட்களாக நீடித்த டேங்கர் லாரி சங்கங்களின் போராட்டம் வாபஸ்
14 Oct 2025சென்னை : சென்னை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து 6 நாட்களாக நீடிதத் டேங்கர் லாரி சங்கங்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
-
வருங்கால வைப்புநிதியில் இருந்து இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம்
14 Oct 2025புதுடெல்லி : வருங்கால வைப்புநிதியில் இருந்து இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக 'மா' விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க மாம்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
14 Oct 2025சென்னை : நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யவும், மா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் மாம்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை தேவை என்று ப
-
தமிழக சட்டப்பேரவைியல் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று ஆரம்பம் : முதல் நாளில் இரங்கல் தீர்மானம் - அவை ஒத்திவைப்பு
14 Oct 2025சென்னை : தமிழ்நாடு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறுவுள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இருப்பு
14 Oct 2025சென்னை : சென்னை குடிநீர் வழங்கும் ஏரியில் போதிய நீர் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகாராஷ்டிராவில் 60 மாவோயிஸ்டுகள் சரண்
14 Oct 2025மும்பை : மகராஷ்டிராவில் மாவோயிஸ்ட் தளபதி உள்பட 60 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
-
ராணாவுக்கு கம்பீர் ஆதரவு
14 Oct 2025சமீபத்தில் ஆசிய கோப்பை 2025 தொடரில் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்திய போதிலும் (54 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் இல்லை) அவர் இரண்டு அணியிலும் ஹர்ஷித் ராணா தேர்வு செய்ய
-
நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்
14 Oct 2025டெல்லி : நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிடப்படும் விளம்பரத்திற்கு சான்றிதழ் பெறுவது கட்டாயம்
14 Oct 2025பீகார், பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிடும் விளம்பரத்திற்கு சான்றிதழ் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 3 பேருக்கு ஜாமீன்
14 Oct 2025சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
-
மகாராஸ்டிராவிற்கு கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி சீன பட்டாசுகள் பறிமுதல்
14 Oct 2025மும்பை : மராட்டியத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 6 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.