முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாகன கட்டுப்பாட்டு திட்டம் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

புதன்கிழமை, 13 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

டெல்லியில் தேவைப்பட்டால் வாகன கட்டுப்பாட்டு திட்டம் நீட்டிக்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியை ஒட்டியுள்ள அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பது உள்ளிட்ட காரணங்களால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக காற்று மாசு சற்று குறைந்திருந்த நிலையில் அது மீண்டும் உச்சத்தைத் தொடும் நிலைக்கு சென்றுள்ளது.

இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதற்கிடையில், டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் ஒரு திட்டமாக வாகன கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் நாளை வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், தேவைப்பட்டால் வாகன கட்டுப்பாடு திட்டம் மேலும் நீட்டிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து