முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படமாட்டாது - முதல்வர் நிதிஷ் குமார் தகவல்

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட மாட்டாது என சட்டசபையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார். 

மத துன்புறுத்தல்களை எதிர்கொண்டு 2014 டிசம்பர் 31 வரை பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த இந்து, சீக்கியம், புத்தம், சமணம், பார்சி மற்றும் கிறிஸ்தவம் ஆகிய ஆறு முஸ்லிம் அல்லாத சமூகங்களுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை (திருத்த) சட்டம் , கடந்த வெள்ளிக்கிழமை நடைமுறைக்கு வந்தது.

இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் பீகார் சட்டசபையில் பேசிய முதல்-மந்திரி நிதிஷ் குமார் கூறியதாவது:-

பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி எந்த கேள்வியும் இல்லை. இது அசாமின் சூழலில் மட்டுமே அமல்படுத்தப்படும். பிரதமர் நரேந்திர மோடியும் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து