எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம், கிராமங்களில் லட்சக்கணக்கில் பணம் புழங்குவதற்கு அடிப்படை காரணம் தமிழ்நாடு முதல்வர் வழங்கும் ரூ. 1,000 குடும்பத்தலைவிகளுக்கான மகளிர் உரிமைத்தொகை என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரச்சாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சேலத்தில் நடந்த திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, ஒரு கிராமத்தில் 2 ஆயிரத்து 500 பேருக்கு மாதம் தலா ரூ. 1,000 குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்குகளுக்கு செல்கிறபோது அந்த மாதத்தில் கிடைக்கக்கூடிய கிட்டத்தட்ட ரூ. 25 லட்சம் கிராமத்தில் சுழற்சியடைகிறது.
மளிகை கடையில், டீக்கடையில், ஜவுளிக்கடையில் , இறைச்சிக்கடையில் பணம் இல்லை என்ற நிலையை மாற்றி ஒவ்வொரு கிராமத்திலும் லட்சக்கணக்கில் பணம் புழங்குகிறது. கிராமங்களில் லட்சக்கணக்கில் பணம் புழங்குவதற்கு அடிப்படை காரணம் தமிழ்நாடு முதல்வர் வழங்கும் ரூ. 1,000 குடும்பத்தலைவிகளுக்கான மகளிர் உரிமைத்தொகை. ஆயிரம் மோடிக்கள் வந்தாலும், ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும், ஓராயிரம் எடப்பாடிக்கள் வந்தாலும் ஓமலூரில் உதயசூரியன் சின்னத்தை யாராலும் தடுக்க முடியாது. அது வெற்றிக்கோட்டை. என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


