எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி : தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் கொண்டு வரப்படுமா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அரசின் பரிசீலனையில் உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் உள்ள அகண்ட காவிரியில் 1836-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மேலணை கட்டப்பட்டது. இதில் காவிரி ஆற்றில் 41 கண் மதகு கொண்ட மேலணையும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் உபரி நீரை திறந்து விடும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் 45 கண் மதகுகள் கொண்ட மேலணையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ம் தேதி அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக கொள்ளிடம் தெற்கு மேலணையில் உள்ள 45 மதகுகளில் 6 முதல் 14 வரையிலான 9 மதகுகள் இடிந்து விழுந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. 630 மீட்டர் நீளமுள்ள மொத்த அணையில் 110 மீட்டர் அளவுக்கு சேதமடைந்து தண்ணீர் வெளியேறியது. மேலணை மதகுகள் உடைந்த பாலம் துண்டானதால் அந்த வழியாக போக்கு வரத்து தடை செய்யப்பட்டது. முக்கொம்பு மேலணை உடைந்த மறுநாளே அங்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , மேலணையில் இருந்து 100 மீட்டர் தள்ளி புதிய கதவணை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், முழுமையாக இரண்டு பக்கங்களிலும் காவிரி தவிர்த்து கொள்ளிடத்தில் மட்டும் அணை கட்டப்படும் என்றும் தெரிவித்தார். இந்த அணை ரூ.387.60 கோடி மதிப்பில் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதன்படி முக்கொம்பில் புதிய அணை கட்டும் பணி கடந்த 6-3-2019 அன்று தொடங்கப்பட்டது. தொடர்ந்து பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முக்கொம்பு அணை கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சையில் நேற்று நடைபெற்ற வைத்திலிங்கம் எம்.பி. இல்ல திருமண விழாவில் பங்கேற்று விட்டு திருச்சி வந்த அவர் முக்கொம்பு அணைக்கு சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொதுப்பணித்துறை என்ஜினீயர்களிடம் பணிகள் குறித்த விவரங்களை கேட்ட றிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெள்ளத்தால் இடிந்து விழுந்த முக்கொம்பு கொள்ளிடம் அணைக்கு மாற்றாக புதிதாக ரூ. 387.60 கோடி மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை 31-1-2021க்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 484 பைல்களில் 287 பைல்கள் முடிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 1650மீட்டர் நீளமுள்ள அடித்தளசுவரில் 711 மீட்டர் நீளமுள்ள அடித்தள சுவர் முடிக்கப்பட்டுள்ளன. 1532 மீட்டர் நீளமுள்ள குறுக்கு வெட்டுச்சுவரில் 500 மீட்டர் நீளமுள்ள குறுக்கு வெட்டுசுவர் முடிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 7800 எண்ணிக்கையிலான கான்கிரீட் பிளாக்குகளில் (சி சி பிளாக்ஸ்) 1489 கான்கிரீட் பிளாக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. 55 எண்ணிக்கையிலான மதகு கதவுகளில் 45 மதகு கதவுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தினர் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- கர்நாடகாவில் மேகதாதுவின் குறுக்கே மீண்டும் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
பதில்:- காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வந்து விட்டது. காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தடுக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெளிவான தீர்ப்பினை கூறிவிட்டது. இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை.
கேள்வி:- காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் திருச்சி, அரியலூர், கரூர் மாவட்டங்களை சேர்க்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்களே?
பதில்:- விவசாயிகள் தரப்பில் இருந்து எனக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயு இருக்கும் பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததன் அடிப்படையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளோம்.
கேள்வி:- அ.தி.மு.க. ராஜ்யசபா வேட்பாளர்களை முடிவு செய்து விட்டீர்களா?
பதில்:- தலைமைக்கழகத்தின் மூத்த நிர்வாகிகள் கூடி முடிவு செய்வார்கள்.
தே.மு.தி.க.வுக்கு எம்.பி. பதவியா?
கேள்வி:- தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, தங்கள் கட்சிக்கு மேல்சபை எம்.பி. வேண்டும் என்று கேட்டுள்ளாரே?
பதில்:- கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. எங்கள் கட்சியில் மூத்த தலைவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இருப்பினும் கட்சி தலைமை கூடி இதுபற்றி முடிவு எடுக்கும்.
கேள்வி:- பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (என்.ஆர்.சி.க்கு) எதிராக தீர்மானம் போட்டுள்ளனரே? அது போல் தமிழகத்திலும் வாய்ப்பிருக்கிறதா?
பதில்:- அவையெல்லாம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
-
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்
04 Nov 2025சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உலகக்கோப்பை சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 3 பேருக்கு இடம்
04 Nov 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணியை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி.
-
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
-
கோவை பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
04 Nov 2025கோவை: கோவை பாலியல் வன்கொடுமை துப்பாக்கியால் சுடப்பட்ட வர்கள் உண்மை குற்றவாளிகளா? என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி.
-
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
-
ஐதராபாத் அருகே சாலை விபத்து: 3 சகோதரிகள் பலியான சோகம்
04 Nov 2025தெலங்கானா: தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஐதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உ
-
துணை பொதுச்செயலாளராக பொன்முடி மீண்டும் நியமனம்
04 Nov 2025சென்னை: தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
-
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30 ஆயிரம் நிதி - தேஜஸ்வி யாதவ் உறுதி
04 Nov 2025பாட்னா, இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார்.
-
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
04 Nov 2025மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருநது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
04 Nov 2025பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்
04 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் நேரில் ஆஜராகினர்.
-
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
04 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
நடுவானில் திடீர் கோளாறு: டெல்லி புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் தரையிறக்கம்
04 Nov 2025புதுடெல்லி: நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி: வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வு
04 Nov 2025புதுடெல்லி: முதல்முறையாக உலக கோப்பையை இந்திய அணி வென்று வரலாறு படைத்தன் மூலம், இந்திய வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வடைந்து உள்ளது.
-
மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குற்றச்சாட்டு
04 Nov 2025புதுடெல்லி: மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு குற்றச்சாட்டு
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல் 6 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்
04 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
த.வெ.க.வில் 2,827 பேருக்கு பொறுப்பு
04 Nov 2025சென்னை: 2,827 த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் பொறுப்புகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.


