எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மெல்போர்ன் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
மகளிர் டி20 உலக கோப்பை ஏ பிரிவில் உள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய லீக் போட்டி நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் களம் கண்ட இந்தியாவின் இளம் வீராங்கனை ஷபாலி வெளுத்துக் கட்டி 36 பந்துகளில் 4பவுண்டரி, 3 சிக்சர் விளாசி 46 ரன்னில் ஆட்டமிழந்தார். காயம் காரணமாக ஓய்வில் இருந்து மீண்டும் விளையாட வந்த ஸ்மிரிதி 11, தானியா பாட்டீயா 23, ஜெமீமா ரோட்ரிக்ஸ் 10 என சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ரன் உயர்ந்தபடிதான் இருந்தது.
ஆனால் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 1, வேதா கிருஷ்ணமூர்த்தி 6, தீப்தி சர்மா 8 என குறைந்த ரன்னில் ஆட்டமிழக்க, இந்தியா தடுமாறியது. அதன்பிறகு வந்த ராதா யாதவ் 14, ஷிகா பாண்டே 10 ரன் எடுக்க இந்தியா 20ஓவர் முடிவில் 8விக்கெட் இழப்புக்கு 133ரன் எடுத்தது. அமெலியா கெர், ரோஸ்மேரி மெயர் ஆகியோர் தலா 2, லீ டகுகூ, ஷோபி டெவின், காஸ்பெரேக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து 134ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து களம் கண்டது. தொடக்க வீரர்கள் ரேச்சல் பிரிஸ்ட் 12, கேப்டன் ஷோபி டெவின் 14, சூசி பேட்ஸ் 6ரன் என அடுத்தது ஆட்டமிழந்து இந்தியாவுக்கு மகிழ்ச்சி அளித்தனர்.
ஆனால் மேடி கிரீன் 24, கேத்தி மார்டின் 25 ரன் என வேகம் காட்டியதால் ஆட்டம் நியூசிலாந்து பக்கம் திரும்பியது. கடைசி 2 ஓவரில் நியூசிலாந்துக்கு 12 பந்துகளில் 34 ரன் தேவைப்பட்டது. பூனம் யாதவ் வீசிய 19வது ஓவரில் அமிலியா 4பவுண்டரிகள் உட்பட 18 ரன் சேர்த்தார். அதனால் கடைசி ஓவரில் அந்த அணிக்கு 16 ரன் தேவை என்ற நிலையில் ஷிகா பண்டே பந்து வீசினார். முதல் பந்தில் ஹெய்லி பவுண்டரி விளாசினார். அடுத்த 3 பந்துகளில் ஒவ்வொன்றாக 3 ரன் கிடைத்தது. கடைசி 2 பந்துகளில் 9 ரன் தேவை என்ற நிலையில், 5வது பந்தில் அமெலியா அட்டகாசமாக பவுண்டரி அடித்தார். அதனால் ஒரு பந்தில் 5 ரன் எடுத்தால் வெற்றி என்றானது. எனவே சிக்சர் அடித்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தை சந்தித்தார் அமெலியா. அவர் அடித்த பந்து தரையை தட்டி ஓட ஷிகா அதை பிடித்து ஹெய்லியை ரன் அவுட் செய்தார்.
அதனால் நியூசிலாந்து 20ஓவரில் 6விக்கெட் இழப்புக்கு 129 ரன் மட்டும் எடுக்க, இந்தியா 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் தீப்தி சர்மா, ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ், ராதா யாதவ் என பந்து வீசிய அனைவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். நியூசிலாந்து தரப்பில் அமிலியா கெர் 34*(19பந்து, 6பவுண்டரி), ஹெய்லி ஜென்சன் 11 ரன் எடுத்தனர். தொடர்ச்சியாக ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியின் மூலம் இந்தியா முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


