எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் குறித்து, முன்னணி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கை மீறி பல இடங்களில் மக்கள் வெளியே சுற்றி வருவதைக் காண முடிகிறது. ஊரடங்கை மீறி அநாவசியமாக சுற்றித்திரிந்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சூழலில், கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்கள் 40 பேருடன் பிரதமர் மோடி, காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விராட் கோலி பி.வி. சிந்து, ஹிமா தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ஊரடங்கை மக்கள் கடைபிடிப்பதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலியிடம் இது பற்றி கேட்ட போது, பிரதமர் மோடியுடனான காணொலி காட்சி ஆலோசனையில் தான் பங்கேற்றதாக தெரிவித்தார். ஆனால், இந்த ஆலோசனையில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து கருத்து கூற அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |