முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு நடவடிக்கை: பாராளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை

புதன்கிழமை, 8 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

உலகம் முழுவதும் பரவிய கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் நோய்க்கு  149 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாள்  ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக கடந்த மாதம் 24-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இருப்பினும், கொரோனா வைரசின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உத்தரபிரதேசம் உட்பட பல மாநில அரசுகள் மற்றும் வல்லுநர்களின்  கோரிக்கையின்படி, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை வரும் 14-ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த பாராளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளிலும் 5-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை கொண்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.  இந்நிலையில், பாராளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுப்பட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில், அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர்  டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடவும், தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைகளை வழங்க பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து