முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவுக்கு எதிரான போரில் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும்: பிரதமர் மோடி

சனிக்கிழமை, 23 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனாவுக்கு எதிரான போரில் இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவு மற்றும் உதவிகளையும் இந்தியா வழங்கும் என பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று இலங்கை அதிபர்  கோத்தபய ராஜபக்சேவுடன் தொலைபேசியில் உரையாடினார், தற்போது நடைபெற்று வரும் கொரோனா தொற்றுநோய் மற்றும் பிராந்தியத்தில் ஏற்படக் கூடிய சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து இருவரும் பேசினர் இரு தலைவர்களும் இந்திய தனியார் துறையால் இலங்கையில் முதலீடுகள் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் விவாதித்தனர்.

கொரோனவின் விளைவுகளைத் தணிக்க இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அனைத்து ஆதரவையும் அளிக்கும் என்றும் பிரதமர் இலங்கை அதிபருக்கு உறுதியளித்தார். இலங்கையில் இந்திய உதவியுடன் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து