முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்தது: தென்மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இடியுடன் மழை : மதுரையில் 3 மணி நேரம் வெளுத்து வாங்கியது

வியாழக்கிழமை, 28 மே 2020      தமிழகம்
Image Unavailable

கோடையின் அக்னி நட்சத்திரம் நேற்று முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் மழை பெய்தது. மதுரையில் 3 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இந்தாண்டு மே 4-ல் தொடங்கியது. இதனால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. நேற்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவுபெற்றது. இந்த காலகட்டத்தில் சூரிய ஒளி நேரடியாக பூமி மீது விழும். அதனால் வெப்பத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என்று பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. நேற்று பிற்பகலில் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட  சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கோடை மழை பெய்தது. இதனால் காலையில் தகித்த வெப்பம் தணிந்தது. குளிர்ந்த காற்றும் வீசியது. மேலும் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. காங்கேயநல்லூர், வள்ளலார், சத்துவாச்சாடி, காதிப்பட்டறை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்திரம், ரெட்டியார்பட்டி, வீரகேரளம்புதூர் உள்ளிட்ட ஊர்களில் மழை பெய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து