முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா அச்சம்: ஆந்திர மாநில சபாநாயகர் அலுவலகம் மூடல்

வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : கொரோனா அச்சத்தால் ஆந்திர மாநில சபாநாயகர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. 

ஆந்திர மாநிலத்தில் கொரோனாதொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் பலர் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். 

ஆந்திர தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், 4 துறைகளின் அலுவலகங்கள் மூடப்பட்டன. 

இந்நிலையில் சட்டமன்ற சபாநாயர் தம்மிநேனி சீதாராம், அமைச்சர் தர்மான கிருஷ்ணா தாஸ் ஆகிய இருவரும் தங்கள்அலுவலகங்களை பூட்டி விடுமாறு நேற்று முன்தினம் உத்தரவிட்டனர்.

இதையடுத்து இருவரின் அலுவலகங்களும் பூட்டப்பட்டன. கொரோனா பரவி வருவதால், தங்களின் அலுவலகத்திற்கோ அல்லது வீட்டுக்கோ இன்னமும் 15 நாட்களுக்கு யாரும் வர வேண்டாம் என இவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து