முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

புதன்கிழமை, 15 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் கீழ் அணைக்கட்டில் 7 செ.மீ மழை பதிவாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து