முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 6,426 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

புதன்கிழமை, 29 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் தொடர்ந்து 7-வது நாளாக 6 ஆயிரத்தை தாண்டி கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் மராட்டியத்திற்கு அடுத்த படியாக தமிழகம் 2-ம் இடம் வகிக்கிறது.   

சென்னையில்  கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது. ஆனால், சென்னையை தவிர்த்து பிற  மாவட்டங்களில் தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன. எனினும், கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.  

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்  6,426  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,34,114 -  ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று ஒரு நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.   

சென்னையில் நேற்று ஒருநாளில் 1,117-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் 5,927 பேர் குணம் அடைந்துள்ளனர். இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து