எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர் வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
2003-ம் ஆண்டு அம்மாவின் தலைமையிலான அரசால் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23 கிலோ மீட்டர் தூர வழித் தடம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலான 22 கிலோ மீட்டர் தூர வழித் தடம் என இரு வழித்தடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
18,380 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்துவதற்கு தேவையான மாநில அரசின் நிலங்கள் மற்றும் நிதி பங்களிப்பினை வழங்கிய பெருமை அம்மாவையே சாரும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செம்மையாக செயல்படுத்துவதற்காக, தொடர் ஆய்வுகளை நடத்தி, கீழ்க்கண்டவாறு பணிகளையும், பயணிகள் சேவைகளையும் அம்மா துவக்கி வைத்துள்ளார்.
29.6.2015 அன்று, கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் பயணிகள் சேவை துவக்கப்பட்டு, கோயம்பேடு பணிமனையுடன், கோயம்பேடு, சென்னை புறநகர் பேருந்து நிலையம் (CMBT), அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.
23.7.2016 அன்று வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான 3770 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், 9.05 கிலோ மீட்டர் நீளமுள்ள சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்ட நீட்டிப்புத் திட்டத்திற்கான பணிகள் துவக்கப்பட்டன.
21.9.2016 அன்று சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான 8.6 கிலோ மீட்டர் நீளத்திலான வழித்தட பகுதி மற்றும் ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையில் 1.2 கிலோ மீட்டர் நீளத்திலான வழித்தடப் பகுதிகளில் பயணிகள் சேவை துவக்கப்பட்டு, சென்னை விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலை ஆகிய 6 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.
சென்னை பெருநகர் பகுதியில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு 54 கி.மீ நீளத்திலான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-I மற்றும் கட்டம்-Iன் நீட்டிப்பு வழித்தடங்கள் போதாது என்பதால், கட்டம்-II க்கான விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு செப்டம்பர் 2014-ல் ஆணைகள் வழங்கப்பட்டன.
அம்மாவை தொடர்ந்து அம்மாவின் அரசும், 14.5.2017 அன்று கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரையிலான 7.4 கிலோ மீட்டர் நீளத்திலான முதல் சுரங்க வழித்தடப் பகுதியில் பயணிகள் சேவை துவக்கப்பட்டு, திருமங்கலம், அண்ணாநகர் கோபுரம், அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மற்றும் நேரு பூங்கா ஆகிய 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.
25.5.2018 அன்று, நேரு பூங்கா முதல் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான 2.5 கிலோ மீட்டர் நீளத்திலான சுரங்க வழித்தடத்திலும், சின்னமலை முதல் ஏ.ஜி.-டி.எம்.எஸ் வரையிலான 4.35 கிலோ மீட்டர் நீளத்திலான சுரங்க வழித்தடத்திலும் பயணிகள் சேவை துவக்கப்பட்டு, எழும்பூர் மெட்ரோ, சென்ட்ரல் மெட்ரோ, சைதாப்பேட்டை மெட்ரோ, நந்தனம், தேனாம்பேட்டை மற்றும் ஏ.ஜி.-டி.எம்.எஸ் ஆகிய 6 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.
10.2.2019 அன்று திருப்பூரில் நடைபெற்ற விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் காணொலிக் காட்சி மூலம் ஏ.ஜி.-டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான 10.9 கிலோ மீட்டர் நீளத்திலான சுரங்க வழித்தடத்தில் பயணிகள் சேவை துவக்கப்பட்டு, ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி, அரசினர் தோட்டம், சென்ட்ரல் மெட்ரோ, உயர்நீதிமன்றம், மண்ணடி மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.
கட்டம்-IIல் மாதவரம் முதல் சிப்காட் வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மொத்தம் 118.9 கி.மீ நீளத்திலான மூன்று வழித்தடங்கள் மற்றும் 128 மெட்ரோ நிலையங்களுடன் 61,843 கோடி ரூபாய் செலவு மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி பங்களிப்பு கோரப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - கட்டம்-I-ன் கீழ், ஆலந்தூர் மெட்ரோ, சென்ட்ரல் மெட்ரோ மற்றும் புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ நிலையங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவும், பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன. மேற்கண்ட மெட்ரோ நிலையங்களின் பெயர்களை நமது மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மற்றும் டாக்டர் ஜெ.ஜெயலலிதா ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் மாற்றி அமைக்கலாம் என்ற உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை ஏற்று, சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம் என்று பெயரிட்டதைப் போல், ஆலந்தூர் மெட்ரோ – Alandur Metro என்பது அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ - Alandur Metro என்றும்,
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் வைத்ததைப் போல சென்ட்ரல் மெட்ரோ - Central Metro என்பது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ - “Puratchi Thalaivar Dr.M.G.Ramachandran Central Metro என்றும், அம்மாவின் ஆசியாவில் மிகப்பெரிய பேருந்து முனையமான சென்னை புறநகர் பேருந்து நிலையத்தையும், அங்கு அமைந்துள்ள மெட்ரோ நிலையத்தையும் திறந்து வைத்ததாலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை நினைவு கூறும் வகையில், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ (CMBT Metro) என்பது புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ Puratchi Thalaivi Dr.J.Jayalalithaa CMBT Metro என்றும் பெயர் மாற்றங்கள் செய்து நான் ஆணையிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.