முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா அச்சுறுத்தல்: தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து திரிபுரா முதல்வர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 

திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட பிப்லாப் குமார் தேவ், கொரோனா பரிசோதனையும் மேற்கொண்டுள்ளார். பரிசோதனையின் முடிவுகள் இன்னும் வரவில்லை. 

இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிப்லாப் குமார் தேப்," எனது குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம். எனக்கு இன்னும் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. 

ஏனைய அனைவருக்கும் நெகட்டிவ் என்றே முடிவுகள் வந்துள்ளன. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட எனது குடும்பத்தினர் விரைவில் உடல் நலம் பெற இறைவனிடம் பிரார்த்தியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து