முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள விமான விபத்து சம்பவத்தால் மிகவும் துயரப்படுகிறோம்: அமெரிக்கா

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : கேரளாவில் நடைபெற்ற விமான விபத்து சம்பவத்தால் மிகவும் துயரப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

துபாயில் இருந்து நேற்று முன்தினம் 190 பயணிகளுடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.  இந்நிலையில், கேரள விமான விபத்து குறித்து அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரள விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக எங்கள் இதயம் வெளியே செல்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்காவும், நண்பர்களுக்காகவும் நாங்கள் மிகவும் துயரப்படுகிறோம்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து