முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவிப்பு: செப்டம்பரில் மக்களின் பயன்பாட்டுக்கு கொரோனா தடுப்பூசி தயார்: மகளுக்கே செலுத்தி சோதனை நடத்திய பின் தகவல்

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ : கொரோனா தடுப்பூசி செப்டம்பரில் மக்களின் பயன்பாட்டுக்காக தயார் என்று தனது மகளுக்கே செலுத்தி சோதனை நடத்திய பின் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்குகிற அளவுக்கு, இன்றைக்கு அந்த வைரஸ் உலகை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த 8 மாதங்களாக உலக நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தினம் தினம் ஆயிரக்கணக்கில் அதிகரித்து கொண்டே செல்கிறது. 

இந்த நிலையில் இந்த வாரத்துக்குள் உலக அளவில் கொரோனா பாதிப்பு 2 கோடியை எட்டும் என உலக சுகாதார அமைப்பு கணித்தது. ஆனால் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 2 கோடியை தாண்டியது. பலி எண்ணிக்கையும் 7 லட்சத்து 50 ஆயிரத்தை மிஞ்சும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கூறினார். 

இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.37 லட்சத்தை தாண்டியுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,37,863 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 20,236,931 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13,092,792 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 64,558  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் நேற்று முன்தின நிலவரப்படி 62,064 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் நேற்று கடந்த 24 மணி நேரத்தில் 53,601 ஆக குறைந்தது. நேற்று முன்தினம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர்.

நேற்று பலி எண்ணிக்கை 871 ஆக குறைந்தது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,68,675 ஆக உயர்ந்துள்ளது. 15,83,489 பேர் குணமடைந்துள்ள நிலையில், 45,257 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தவர்களின் சதவீதம் 69.80 ஆக உள்ள நிலையில், 28.21 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு விகிதம் 1.99 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனாவுக்கான தடுப்பூசி பரிசோதனை தொடங்கியது. தனது சொந்த மகளுக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதனையை அதிபர் புடின் தொடங்கி வைத்துள்ளார். 

கொரோனாவுக்கான மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அதிபர் புடின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த முதல் நாடு ரஷ்யா என்று பெருமிதம் தெரிவித்துள்ளது. உலகில் முதல் முறையாக கொரோனா தடுப்பு ஊசியை ரஷ்யா கண்டுபிடித்தது.

அதிபர் புதின் மகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு சோதனை வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்கோவில் உள்ள ஹேமாலயா இன்ஸ்டிடியுட் மற்றும் ரஷ்ய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளது. செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து