முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையைப் போல் பிற மாவட்டங்களிலும் தெருத் தெருவாக சோதனை நடத்தப்படும்: தலைமைச்செயலாளர் சண்முகம் தகவல்

புதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையைப் போல் பிற மாவட்டங்களிலும் தெருத் தெருவாக சோதனை நடத்தப்படும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, 

சென்னையைப் போல் பிற மாவட்டங்களிலும் தெருத் தெருவாக சோதனை நடத்தப்படும்.  காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க அறிவுறுத்தி உள்ளோம்.   நோய்த் தொற்று அறிகுறி தோன்றுவதற்கு முன்பே நோயாளிகளை கண்டறிய முகாம்கள் உதவும்.  பரிசோதனை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன. 

24 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை முடிவை தெரிந்து கொள்ளலாம்.  முகாம்களில் தரமான உணவு வழங்குவது குறித்து கண்காணிக்கப்படும்.  கொரோனா குறித்து பொது மக்களும் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து