முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுஷாந்த் சிங் மரணம்: நண்பரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 23 ஆகஸ்ட் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

மும்பை : சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நண்பர் சித்தார்த் பிதானியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவர் தங்கியிருந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என்று சுஷாந்தின் தந்தை பீகார் காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

மும்பையில் உள்ள டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கியிருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நண்பரான சித்தார்த் பிதானிக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. 

இதனைத் தொடர்ந்து சித்தார்த் பிதானி சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கியுள்ள இடத்திற்கு சென்றார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து