எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்தபடி தமிழகம் முழுவதும் இன்று மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மண்டல பிரிப்பு இல்லாமல் யாரும் எந்த மாவட்டத்திற்கும் செல்லலாம். இப்படி இயல்பு நிலை திரும்புவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று முதல் ரயில்களும் இயக்கப்படவுள்ளதால் மக்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை பதம்பார்த்து வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 90 ஆயிரத்து 633 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த வைரசை ஒழித்துக்கட்ட இந்திய அரசு கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இடையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஆலயங்கள் கூட இழுத்து மூடப்பட்டன. பள்ளிக் கல்லூரிகள் இன்று வரை திறக்கப்படவில்லை. அதே போல திரையரங்குகளும் மாதக்கணக்கில் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதை பின்பற்றி தமிழக அரசும் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அதன்படி மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கிய இ- பாஸ் நடைமுறை கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டது. கடந்த 1-ம் தேதி முதல் மாவட்டத்திற்குள்ளாக நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் பொதுமக்கள் ஓரளவு மகிழ்ச்சியடைந்தனர். வெளியூர் பஸ்களையும் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரி வந்தார்கள்.
இந்தநிலையில்தான் பொது போக்குவரத்துக்கு எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியது.
அதனை ஏற்று பல மாநிலங்கள் பஸ்களை இயக்கி வருகின்றன. தமிழகத்தில் 7-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் ஓடும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்தார்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அவர் இவ்வாறு அறிவித்தார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படுகின்றன. சாதாரண பஸ்கள் மட்டுமின்றி, விரைவு போக்குவரத்து கழக பஸ்களும் இயக்கப்படுகின்றன.
அதனை முன்னிட்டு பராமரிப்பு பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. பஸ்களில் கிருமி நாசினி தெளிப்பது, சுத்தப்படுத்துவது, பிரேக் உள்ளிட்டவைகளை சரிபார்ப்பது போன்ற பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து டிரைவர்களுக்கும், கண்டக்டர்களுக்கும் அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வளவு நாளும் இரவு நேரத்தில் தூங்கி பழகி விட்டதால் இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று டிரைவர்களுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி கண்டக்டர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வெளியூர் பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அநேகமாக தமிழகத்தில் இயல்பு நிலை வழக்கம் போல் திரும்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
இல்லையேல் மீண்டும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. ஆகவே பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் மீண்டும் லாக்டவுன் போன்ற நிலை வராது என்பது மறுக்க முடியாத உண்மை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.