முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். கிரிக்கெட் ஆரம்பம்: மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய் : முதலாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியுடன் தொடங்கியதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

13 - வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்  தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

சவுரவ் திவாரி 42 ரன்களும், டி காக் 33 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி சார்பில் எங்கிடி 3 விக்கெட்டும், தீபக் சஹர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே விஜய் 1 ரன்னிலும், வாட்சன் 4 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். பவர் பிளே முடிந்து சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 எடுத்துள்ளது.

தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடுவும், டூ பிளசிசும் பொறுப்புடன் ஆடினர். குறிப்பாக, அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவருக்கு டு பிளசிஸ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

அதனால் சென்னை அணியின் ரன் வேகம் அதிகரித்தது. இறுதியில், சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 48 பந்தில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

டூ பிளசிசும் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியுடன் தொடங்கியதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்கிய மகேந்திர சிங் தோனி வித்தியாசமான தோற்றித்தில் இருந்தார். அவரது இந்த தோற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து