முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து 3-வது நாளாக தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கு கீழே சென்ற கொரோனா தொற்று பாதிப்பு

புதன்கிழமை, 14 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் தொடர்ந்து 3 வது நாளாக 5 ஆயிரத்துக்கு கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் நேற்று புதிதாக 4,462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,70,392 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் நேற்று 52 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,423 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று  5,083 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,17 லட்சமாக  உயர்ந்துள்ளது.தமிழகத்தில் தற்போது 42,566 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று ஒருநாளில் 1,130 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,332 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தொடர்ந்து 3 வது நாளாக 5 ஆயிரத்துக்கு  கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து