எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கட்சியின் பொன்விழா ஆண்டிலும், அம்மாவின் அரசாட்சியே தொடர்ந்தது என்னும் வரலாற்றை படைப்போம்! வாகை சூடுவோம் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,
எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோரின் பால் நீங்கா அன்பு கொண்டு, அ.தி.மு.க. என்னும் அற்புத இயக்கத்தை வேர்களாவும், விழுதுகளாகவும் கட்டிக் காக்கும் அன்புத் தொண்டர்கள், அருமை உடன்பிறப்புக்கள் அனைவருக்கும், கழகத்தின் 49-வது ஆண்டு தொடக்க விழா நல்வாழ்த்துக்களை எல்லையில்லா மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்.ஜி.ஆர் அவர்கள், தமிழ் மக்கள் மீது தான் கொண்டிருந்த அன்பையும், தமிழக மக்கள் தன் மீது வைத்திருக்கும் பாசத்தையும் அடித்தளமாக கொண்டு, புதியதோர் தமிழகம் படைத்திட, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். அம்மா கழகத் தொண்டர்களை தாயன்போடு அரவணைத்து, தனது அறிவு, ஆற்றல், உழைப்பு அனைத்தையும் இந்த இயக்கத்திற்கே உரிமையாக்கி உலகப் பேரியக்கங்களில் ஒன்றாக இந்த இயக்கத்தை வளர்த்தெடுத்தார். அம்மா மறைவிற்குப் பின், கழகமே கோயில் என்றும், அம்மாவே தெய்வம் என்றும், வணங்கிடும் அம்மாவின் அன்புத்தொண்டர்கள், அம்மாவின் சூளுரைப்படி பல நுhறாண்டுகள் கழகம் நிலை பெற தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் நல்கிட உறுதி பூண்டு, நமது இயக்கம் 48 ஆண்டுகள் கடந்து 49-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கட்சியின் மீது நம்பிக்கையுடன் இருந்தால், கட்சித் தலைமையின் மீது விசுவாசத்துடன் இருந்தால், கடைக்கோடி தொண்டரும் கழகத்தை வழிநடத்தும் ஓருங்கிணைப்பாளராக முடியும், அ.தி.மு.க. அரசுக்கு தலைமையேற்கும் முதலமைச்சராக முடியும், என்று உலகுக்கு எடுத்துகாட்டிக் கொண்டிருக்கும் இயக்கம், நம்முடைய இயக்கம். உண்மையும் உழைப்பும் இருந்தால், பதவிகளும், உதவிகளும் தானாகத் தொண்டர்களைத் தேடிவரும் என்று வெள்ளிடைமலை போல் வெளிப்படையாக காட்டிக் கொண்டிருக்கும் இயக்கம், நம்முடைய இயக்கம். இந்த இயக்கத்தை ஆட்சி பீடம் ஏற்றிய எம்.ஜி.ஆர், அவரது பாதையில் பொற்கால ஆட்சி தந்து புகழ் படைத்த அம்மா ஆகிய இரு பெரும் தலைவர்களின் பாதையில், அந்த மாபெரும் தலைவர்கள் நமக்கு கற்று தந்த பாடங்கள் மற்றும் படிப்பினைகளின் வழி நின்று, ஒருமித்த கருத்து கொண்ட ஒற்றுமை உணர்வோடு, ஒய்வில்லா உழைப்பாலும் மக்கள் நலம் பேணும் மாண்பாலும், கழகத்தையும் அம்மாவின் அரசையும் வெற்றி நடைபோட செய்து, தமிழக மக்களின் அன்பையும் ஆதரவையும் ஒரு சேரப் பெற்று, அவர்களது இதயங்களில் நீங்காத் தனியிடத்தை பெற்றிக்கிறோம். இன்று நமது எண்ணங்களில் நிறைந்திருக்கும் சொல் ஒன்றுதான். அதுதான் வெற்றி! நாம் மேற்கொள்ள வேண்டிய செயலும் ஒன்றுதான். அதுதான் வெற்றிக்குப் பாடுபடும் உழைப்பு!
அம்மா சூளுரைத்த படி, மகத்தான இந்த இயக்கத்தை இன்னும் நூறு ஆண்டுகள் நிலை பெறச் செய்திட வேண்டும். அம்மாவின் அறிவுரைப்படி மக்கள் பணி செய்ய எதிர்வரும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வை மீண்டும் வெற்றி பெறச் செய்திட வேண்டும். அம்மாவின் திட்டங்கள் எல்லாம் வெற்றிகரமாக தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று சொன்னால், சுயநல சந்தர்ப்பவாத கும்பலிடம் தமிழகம் எப்போதும் சிக்கி விடக்கூடாது என்று சொன்னால், அம்மாவின் வழியில் மக்கள் நலனுக்கான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று சொன்னால், 2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று அம்மாவின் அரசு அமைந்திட வேண்டும். கட்சியின் பொன்விழா ஆண்டிலும், அம்மாவின் அரசாட்சியே தொடர்ந்தது என்னும் வரலாற்றை படைப்போம்! வாகை சூடுவோம்! இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.