எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் துரித நடவடிக்கையால் ‘நிவர்’ புயலை சிறப்பாக கையாண்டு உயிர் தேசம் எதுவும் ஏற்படாத வகையில் வரலாற்று சாதனை படைத்து 100 சதவீதம் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனனர் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மிகத் தீவிர ‘நிவர்’ புயலானது இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி அளவில் புதுச்சேரிக்கு அருகாமையில் கரையை கடந்து அதற்கு பிறகு படிப்படியாக வேகம் குறைந்துள்ளது.
நிவர் புயலால் பாதிப்புக்குளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு தேசிய மீட்புப் படையின் 15 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். காலை நிலவரப்படி 15 மாவட்டங்களில் வெள்ளம் பாதிப்பிற்குள்ளாகியுள்ள பகுதிகளில் வசித்து வந்த 92,132 ஆண்கள், 93,380 பெண்கள் மற்றும் 39,886 குழந்தைகள் உட்பட மொத்தம் 2,25,398 நபர்கள் 3042 தங்கும் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு தேவையானஉணவு, சுகாதாரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு 880 நிரந்தர மருத்துவ முகாம்களும், 244 நடமாடும் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு, அதில் 73,941 பேர் பயன் அடைந்துள்ளனர். மேலும் 5000 நிவாரண முகாம்களும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.
140 முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பலமாக காற்று வீசிய போதும் உயிர் தேசம் எதுவும் ஏற்படாத வகையில் ஒருவரலாற்று சாதனையை இயற்கையை கையாண்டு புதிய அத்தியாயத்தை, புதிய இலக்கணத்தை நமது முதல்வர் படைத்து காட்டியுள்ளார். புயல் உருவாவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிய போதும் 100 சதவீதம் மக்கள் பாதிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் துரித நடவடிக்கையின் காரணமாகவே பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில் மின்சாரம் தாக்கியோ, சுவர், மின்னல் இடி தாக்கியோ எந்த உயிர் இழப்பும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் திருவல்லிக்கேணியில் மரம் விழந்து ஒரு உயிரிழப்பும், திருவள்ளூரில் மண் சுவர் சரிந்து விழுந்தது என இருசம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. இயற்கையை அறிவுபூர்வமாக, ஆக்கபூர்வமாக முதல்வர் கையாண்ட விதம் அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகின்றனர். நிவர் புயலால் குடிசை வீடுகள் 85, ஒட்டு வீடு 12 என மொத்தம் 101 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக. ஆடு,மாடு என 26 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக இதுவரை தகவல் கிடைத்துள்ளது. பயிர் காப்பீட்டு தொக
அதே போன்று கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணியை வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். இந்த பணிகள் முடிந்தவுடன் பயிர் சேதத்திற்கான இழப்பீட்டு தொகை மற்றும் பயிர் காப்பீட்டு தொகையையும் வழங்குவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார்.
காலை நிலவரப்படி 380 மரங்கள் விழந்து அந்த மரங்கள் 1 மணிநேரத்தில் அகற்றப்பட்டு விட்டது. நிவர் புயலால் பெய்த கனமழை பெய்ததின் காரணமாக மழை நீர் தேங்கியுள்ள நிலையில், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ராட்சத பம்புகள் கொண்டு வரப்பட்டு சாலை, வீடுகளில் புகுந்துள்ள மழை நீரை போர்கால அடிப்படையில் வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டு அந்த பணிகளும் அவசர கால அடிப்படையில் நடைபெற்று மழை நீர் அகற்றப்பட்டன.
கஜா, ஓக்கி, வர்தா, தானே புயல் ஆகியவை கடந்த காலங்களில் நமக்கு தந்த அனுபவத்தினை கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் வழங்கியதன் அடிப்படையில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக நிவர் புயலை பத்திரமாக எந்த சேதமும் ஏற்டாத வண்ணம் அனுப்பி வைத்துள்ளோம்.
நிவர் புயல் உருவதற்கு 10 நாட்களுக்கு முன்பே அரசின் அறிவிப்புகளை மக்களுக்கு ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்டது. அந்த அரசின் உத்தரவுகளை மக்கள் 100 சதவீதம் பின்பற்றியதன் காரணமாக நிவர் புயலை பாதுகாப்பாக நாம் கடந்து உள்ளோம். இதற்கு அனைத்து துறைகளின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு, ஊடகத்தினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அதே போன்று நிவர் புயலால் பாதிப்புக்குள்ளான மாவட்டகளில் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியண், சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் மற்றும் வைத்தியலிங்கம் எம்.பி. ஆகியோர் அந்தந்த மாவட்டங்களில் இரவு பகல் உறங்காமல் மக்கள் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதே போன்று வரும் 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் நமக்கு மழை பொழிவு என்பது இருக்கும். அந்த வகையில் எதிர்வரக்கூடிய காலங்களில் புதிதாக உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வுநிலைகளை தொடர்ந்து கண்காணிக்க தேவையான கட்டமைப்புகளை முதல்வர் உருவாக்கி தந்துள்ளார். ஆகவே 24 மணிநேரமும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்.
சென்னையை பொறுத்தவரை 4133 பாதிக்கபடக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஏற்கனவே நான் பலமுறை தெரிவித்துள்ளேன். தமிழக முதல்வரும் அறிவுரையின் படி உள்ளாட்சிதுறை அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தற்போது மழைநீர் தேங்கும் பகுதிகள் 100க்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளது. நான் முழுபூசணிக்காயை சோற்றில்மறைக்க விரும்பவில்லை. தொடர் மழை பெய்யும் போது மழை நீர் தேங்கி மழை விட்ட பின்னர் 1 மணிநேரத்திற்குள் சென்று விடக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளோம். கடந்த காலங்களில் புயல் உருவானதால் அது கடந்த சென்ற பிறகு தான் மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நேற்று முதல் செம்பரபாக்கம் ஏரியை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர், எதிர்கட்சி தலைவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றார். ஆனால் அவர் செல்லும் போது மழை நீர் வடிந்து சாலைகள் நடந்து சென்ற காட்சிகளையே நாம் பார்க்க முடிந்தது. கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளுக்கு சென்று ஆறுதல் கூறுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது மழைநீர் எங்கு தேங்கியிருக்கிறது என்பதை தேடி அலைய வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இவ்வாறுஅவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
பறவைக் காய்ச்சல், அம்மை நோய் பாதிப்புகள்: அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு
23 Apr 2024சென்னை, கோடை காலத்தில் ஏற்படும் பறவைக் காய்ச்சல், அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...