எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் துரித நடவடிக்கையால் ‘நிவர்’ புயலை சிறப்பாக கையாண்டு உயிர் தேசம் எதுவும் ஏற்படாத வகையில் வரலாற்று சாதனை படைத்து 100 சதவீதம் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனனர் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மிகத் தீவிர ‘நிவர்’ புயலானது இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி அளவில் புதுச்சேரிக்கு அருகாமையில் கரையை கடந்து அதற்கு பிறகு படிப்படியாக வேகம் குறைந்துள்ளது.
நிவர் புயலால் பாதிப்புக்குளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு தேசிய மீட்புப் படையின் 15 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். காலை நிலவரப்படி 15 மாவட்டங்களில் வெள்ளம் பாதிப்பிற்குள்ளாகியுள்ள பகுதிகளில் வசித்து வந்த 92,132 ஆண்கள், 93,380 பெண்கள் மற்றும் 39,886 குழந்தைகள் உட்பட மொத்தம் 2,25,398 நபர்கள் 3042 தங்கும் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு தேவையானஉணவு, சுகாதாரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு 880 நிரந்தர மருத்துவ முகாம்களும், 244 நடமாடும் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு, அதில் 73,941 பேர் பயன் அடைந்துள்ளனர். மேலும் 5000 நிவாரண முகாம்களும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.
140 முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பலமாக காற்று வீசிய போதும் உயிர் தேசம் எதுவும் ஏற்படாத வகையில் ஒருவரலாற்று சாதனையை இயற்கையை கையாண்டு புதிய அத்தியாயத்தை, புதிய இலக்கணத்தை நமது முதல்வர் படைத்து காட்டியுள்ளார். புயல் உருவாவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிய போதும் 100 சதவீதம் மக்கள் பாதிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் துரித நடவடிக்கையின் காரணமாகவே பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில் மின்சாரம் தாக்கியோ, சுவர், மின்னல் இடி தாக்கியோ எந்த உயிர் இழப்பும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் திருவல்லிக்கேணியில் மரம் விழந்து ஒரு உயிரிழப்பும், திருவள்ளூரில் மண் சுவர் சரிந்து விழுந்தது என இருசம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. இயற்கையை அறிவுபூர்வமாக, ஆக்கபூர்வமாக முதல்வர் கையாண்ட விதம் அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகின்றனர். நிவர் புயலால் குடிசை வீடுகள் 85, ஒட்டு வீடு 12 என மொத்தம் 101 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக. ஆடு,மாடு என 26 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக இதுவரை தகவல் கிடைத்துள்ளது. பயிர் காப்பீட்டு தொக
அதே போன்று கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணியை வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். இந்த பணிகள் முடிந்தவுடன் பயிர் சேதத்திற்கான இழப்பீட்டு தொகை மற்றும் பயிர் காப்பீட்டு தொகையையும் வழங்குவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார்.
காலை நிலவரப்படி 380 மரங்கள் விழந்து அந்த மரங்கள் 1 மணிநேரத்தில் அகற்றப்பட்டு விட்டது. நிவர் புயலால் பெய்த கனமழை பெய்ததின் காரணமாக மழை நீர் தேங்கியுள்ள நிலையில், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ராட்சத பம்புகள் கொண்டு வரப்பட்டு சாலை, வீடுகளில் புகுந்துள்ள மழை நீரை போர்கால அடிப்படையில் வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டு அந்த பணிகளும் அவசர கால அடிப்படையில் நடைபெற்று மழை நீர் அகற்றப்பட்டன.
கஜா, ஓக்கி, வர்தா, தானே புயல் ஆகியவை கடந்த காலங்களில் நமக்கு தந்த அனுபவத்தினை கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் வழங்கியதன் அடிப்படையில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக நிவர் புயலை பத்திரமாக எந்த சேதமும் ஏற்டாத வண்ணம் அனுப்பி வைத்துள்ளோம்.
நிவர் புயல் உருவதற்கு 10 நாட்களுக்கு முன்பே அரசின் அறிவிப்புகளை மக்களுக்கு ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்டது. அந்த அரசின் உத்தரவுகளை மக்கள் 100 சதவீதம் பின்பற்றியதன் காரணமாக நிவர் புயலை பாதுகாப்பாக நாம் கடந்து உள்ளோம். இதற்கு அனைத்து துறைகளின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு, ஊடகத்தினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அதே போன்று நிவர் புயலால் பாதிப்புக்குள்ளான மாவட்டகளில் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியண், சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் மற்றும் வைத்தியலிங்கம் எம்.பி. ஆகியோர் அந்தந்த மாவட்டங்களில் இரவு பகல் உறங்காமல் மக்கள் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதே போன்று வரும் 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் நமக்கு மழை பொழிவு என்பது இருக்கும். அந்த வகையில் எதிர்வரக்கூடிய காலங்களில் புதிதாக உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வுநிலைகளை தொடர்ந்து கண்காணிக்க தேவையான கட்டமைப்புகளை முதல்வர் உருவாக்கி தந்துள்ளார். ஆகவே 24 மணிநேரமும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்.
சென்னையை பொறுத்தவரை 4133 பாதிக்கபடக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஏற்கனவே நான் பலமுறை தெரிவித்துள்ளேன். தமிழக முதல்வரும் அறிவுரையின் படி உள்ளாட்சிதுறை அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தற்போது மழைநீர் தேங்கும் பகுதிகள் 100க்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளது. நான் முழுபூசணிக்காயை சோற்றில்மறைக்க விரும்பவில்லை. தொடர் மழை பெய்யும் போது மழை நீர் தேங்கி மழை விட்ட பின்னர் 1 மணிநேரத்திற்குள் சென்று விடக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளோம். கடந்த காலங்களில் புயல் உருவானதால் அது கடந்த சென்ற பிறகு தான் மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நேற்று முதல் செம்பரபாக்கம் ஏரியை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர், எதிர்கட்சி தலைவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றார். ஆனால் அவர் செல்லும் போது மழை நீர் வடிந்து சாலைகள் நடந்து சென்ற காட்சிகளையே நாம் பார்க்க முடிந்தது. கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளுக்கு சென்று ஆறுதல் கூறுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது மழைநீர் எங்கு தேங்கியிருக்கிறது என்பதை தேடி அலைய வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இவ்வாறுஅவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.