எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : மதுரை ஒத்தக்கடை போலீஸ் நிலையம் அருகே உள்ள மலைச்சாமிபுரத்தில் வசித்து வந்தவர் அருண் (வயது 46), கட்டிட காண்ட்ராக்டர். இவரது மனைவி வளர்மதி (38). இவர்களது மகள்கள் அகிலா (19), பிரீத்தி (17).
அருணுக்கு சொந்த ஊர் திருச்சி ஆகும். ஒத்தக்கடையில் அவர் குடும்பத்துடன் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.
இவர் பல்வேறு கட்டிட பணிகளில் சப்-காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து வந்தார். இதனால் குடும்பம் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அருணுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. முதலில் சாதாரண காய்ச்சல் என நினைத்த அவர் மருத்துவ பரிசோதனை செய்தபோது மூளை காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதற்காக பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டபோதும் சிகிச்சை பலனின்றி அருண் பரிதாபமாக இறந்தார்.
கணவரின் திடீர் மரணம் வளர்மதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அருண் இறந்ததால் 2 மகள்களுடன் என்ன செய்வது என்று தெரியாமல் வளர்மதி தவிப்புக்குள்ளானார். ஒவ்வொரு நாளும் ஒருயுகமாக தெரிய அன்றாட செலவுக்கே திண்டாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
இதன் காரணமாக பலரிடம் கடன் வாங்கி குடும்பத்தை சமாளித்தார். ஆனால் நாளுக்கு நாள் கடன் அதிகமானதே தவிர அதனை திருப்பி செலுத்த அவரால் முடியவில்லை. இதனால் அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்தார்.
இனி கடன் வாங்காமல் வாழ்வது என்றால் உயிரை விடுவதுதான் சிறந்தது என வளர்மதி முடிவு செய்தார். தனக்கு பிறகு மகள்கள் அனாதையாகி விடக்கூடாது என கருதிய அவர், 2 மகள்களிடமும் தற்கொலை முடிவு குறித்து கூறினார். இதனால் முதலில் அதிர்ச்சி அடைந்த மகள்கள் பின்னர் தாயின் முடிவுக்கு சம்மதித்தனர்.
கார்த்திகை திருநாள் என்பதால் 3 பேரும் வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். அதன் பிறகு உள் அறைக்கு சென்று விட்டத்தில் தனித்தனியாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இவர்கள் வீட்டில் ஆசையாக நாயும் வளர்த்து வந்தனர். அந்த நாய் குடும்பத்தினரிடம் மட்டுமின்றி அக்கம் பக்கத் தினரிடமும் பாசமாக பழகி வந்தது. சாவதற்கு முன்பு பாசமாக வளர்த்த நாயையும் அவர்கள் கொல்ல முடிவு செய்தனர். இதற்காக விஷம் வைத்த உணவை கொடுத்தனர். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அந்த நாயும் பரிதாபமாக இறந்தது.
வளர்மதியின் மகள் தினமும் காலையில் பால் வாங்க செல்வது வழக்கம். அப்போது அவருடன் ஆசையாக வளர்த்த நாயும் பாதுகாப்பாக பின்னால் செல்வதுண்டு. ஆனால் நேற் காலை வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. மேலும் நாயையும் காணவில்லை.
அறிமுகம் இல்லாத நபர்கள் நடந்து சென்றால் நாய் குரைத்து எச்சரிக்கை செய்யும். ஆனால் நேற்று நாய் எந்த சத்தமும் கொடுக்காதது அக்கம் பக்கத்தினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் வளர்மதி வீட்டின் கதவை தட்டினர். ஆனால் நீண்ட நேரமாகியும் உள்ளே இருந்து எந்த சத்தமும் வர வில்லை.
இதுகுறித்து ஒத்தக்கடை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தான் வளர்மதி தனது 2 மகள்களுடன் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது. அவர்கள் ஆசையாக வளர்த்த நாயும் வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்தது.
போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வளர்மதி மற்றும் அவரது மகள்கள் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வளர்மதி வளர்த்து வந்த அவரது தம்பி மகள் மேகலா (13) வீட்டில் இல்லாதது குறித்து போலீசிடம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரித்தபோது, தற்கொலை செய்வதற்கு முன்பாக மேகலாவை பக்கத்து வீட்டிற்கு வளர்மதி அனுப்பி இருப்பது தெரியவந்தது. சிறுமியான அவர் அத்தை சொன்னதால் நேற்று முன்தினம் இரவு பக்கத்து வீட்டிற்கு சென்று விட்டார்.
சம்பவம் பற்றி அறிந்ததும் அக்கம் பக்கத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வீட்டு முன்பு திரண்டனர்.
ஒரே வீட்டில் தாய், மகள்கள் தற்கொலை செய்த சம்பவம் ஒத்தக்கடை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2025.
16 Sep 2025 -
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.