முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெய்வேலி சுரங்க நீரினை ஆதாரமாக கொண்ட கூட்டு குடிநீர் திட்டம்: முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார்

செவ்வாய்க்கிழமை, 22 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடலூர் மாவட்டம், திட்டக்குடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, வடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் கங்கைகொண்டான் பேரூராட்சிகள் மற்றும் மங்களூர், நல்லூர் மற்றும் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 625 ஊரக குடியிருப்புகளுக்கு நெய்வேலி சுரங்க நீரினை ஆதாரமாகக் கொண்டு 479 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.  மேலும், 89 கோடியே 21 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 9 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்திற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். 

தமிழக முதல்வர் கடந்த 16.8.2017 அன்று கடலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், கடலூர்  மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் வழியோர குடியிருப்புகளுக்கென நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.  அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடலூர் மாவட்டம், திட்டக்குடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, வடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் கங்கைகொண்டான் பேரூராட்சிகள் மற்றும் மங்களூர், நல்லூர் மற்றும் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 625 ஊரக குடியிருப்புகளுக்கு நெய்வேலி சுரங்க நீரினை ஆதாரமாகக் கொண்டு 479 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.  இத்திட்டத்தின் மூலம் அப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5.58 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். 

மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நத்தம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடிநீரை கொண்டு 20 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை ஒன்றியத்தைச் சார்ந்த 53 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம்,  நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சிக்கு அம்ரூத் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்,  59  கோடியே  93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வழங்கும் திட்டம்,  ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் 2 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காங்கேயம் நகராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள்,  பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ்,  சென்னை, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில்  69 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரை மற்றும் முதல் தளத்துடன் கூடிய சிறப்புத் தங்குமிடம், சென்னை, திருவல்லிக்கேணி, மீர்சாகிப்பேட்டையில் உள்ள நகர்ப்புர சமூக சுகாதார மையத்திற்கு 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதல்தளம் என மொத்தம் 89 கோடியே 21 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டங்களை முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார். 

மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தேனி மாவட்டம், தென்கரை பேரூராட்சியில் 9 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார். 

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில், அம்மாவின் அரசு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணாக்கர்கள் மருத்துவம் பயில 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கி ஆணையிட்டது. அதன் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னைப் பள்ளிகளில் பயின்று  நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கான சிறப்பு மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை ஆணைகளை பெற்ற 11 மாணவ, மாணவியர் முதல்வரை சந்தித்து, தங்களது மருத்துவ கனவை நனவாக்கியமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்கள். அப்போது தமிழக முதல்வர் அம்மாணாக்கர்களுக்கு மருத்துவருக்கான கோட்டுகள் மற்றும் ஸ்டெதஸ்கோப்புகளை வழங்கி, வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி. சம்பத், டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் டாக்டர் கே.பாஸ்கரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் மகேஸ்வரன், பேரூராட்சிகளின் இயக்குநர் பழனிச்சாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து