Idhayam Matrimony

சேலம், எடப்பாடி தொகுதியில் துவக்க, உயர்நிலை பள்ளிகள்: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி ஒன்றியம், பாப்பாத்திக்காடு கிராமத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியையும், மூலக்காடு கிராமத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியையும் துவக்கி வைத்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 13.3.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வரும் கல்வி ஆண்டில், 5 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும். மேலும், 10 அரசு தொடக்கப் பள்ளிகள் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவைப்படும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். மேலும், தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும் என்றும், வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 26 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் செய்து கொடுப்பதுடன், தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 9 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும், 20.3.2020 அன்று முதலமைச்சர் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பல்வேறு தரப்பினரிடமிருந்தும், பெற்றோர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், ஏற்கனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக, 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், மேலும் 30 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

மேற்கண்ட அறிவிப்புகளுக்கு இணங்க மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில், 25 புதிய தொடக்கப்பள்ளிகள் துவங்கிடவும், 10 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் ஆணைகள் வெளியிடப்பட்டன. மேலும் முதற்கட்டமாக 35 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை, அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், 40 அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை, அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் அரசாணைகள் வெளியிடப்பட்டன.

அதன்படி, முதல்வர், சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி ஒன்றியம், பாப்பாத்திக்காடு கிராமத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியையும், மூலக்காடு கிராமத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியையும் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், பள்ளிக் கல்வி ஆணையர் என்.வெங்கடேஷ், பள்ளிக் கல்வித் இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பழனிச்சாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து