முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க அரசாணை

திங்கட்கிழமை, 12 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை நாதஸ்வரம், தெருக்கூத்து, தாளம் கலைகளுக்காக 2 ஆயிரத்து 780 கலைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இதர நாட்டுப்புற கலைஞர்களிடம் இருந்து 4 ஆயிரத்து 30 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மொத்தம் 6 ஆயிரத்து 810 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலித்து அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விதிமுறைக்கு உட்பட்டு தகுதி உள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் சிறப்பு நிவாரண உதவி வழங்கப்படும்.

இதற்காக ரூ. 1 லட்சத்து 36 ஆயிரம் கோடியே 20 ஆயிரம் நிதி தேவைப்படுவதாக கலை பண்பாட்டு துறை இயக்குனர் கோரி இருந்தார். இது ஏற்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி வரை பதிவு செய்திருந்த நாட்டுப்புற கலைஞர்கள் 6 ஆயிரத்து 810 பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 1 கோடியே 36 லட்சத்து 20 ஆயிரம் வழங்க தமிழக அரசு கலை பண்பாட்டு துறை இயக்குனருக்கு நிர்வாக ஆணை வழங்கி அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி பதிவு செய்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து