முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சித்திரை பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்: குறிப்பிட்ட நேரங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்திரைப் பெருவிழா நாளை 15-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

தற்போது நிலவும் கொரோனா தொற்று நோய் காரணமாக சித்திரைப் பெருவிழா கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்படவுள்ளதால் கோயிலில் குறித்த நேரங்களில் மட்டும் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். திருவிழாவையொட்டி சுவாமி புறப்பாடு காலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. 

நாளை 15-ம் தேதி கோயில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெறும். அன்று சுவாமி புறப்பாடு காலையில் 9 மணி முதல் 11.30 வரை, மாலையில் 5.30 மணிமுதல் 7.30 வரை நடைபெறும். இதில் பக்தர்கள் காலையில் 6 மணி முதல் 9 வரையும்,  11.30 மணி முதல் 12.30 வரையும்,  மாலையில் 4 மணிமுதல் 5.30 வரையும்,  7.30 மணி முதல் 9 வரையும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

வரும் 16, 17, 18, 19, 20, 21 ஆகிய நாட்களில் சுவாமி புறப்பாடு காலை 8 மணி முதல் 9 வரையும், மாலையில் 5.30 மணிமுதல் 7 வரை நடைபெறும். பக்தர்கள் தரிசனத்திற்கு காலை 6 மணியிலிருந்து 8 வரையும், 9 மணி முதல் 12.30 வரையும். மாலை 4 மணிமுதல் 5.30 வரையும், 7 மணிமுதல் 9 வரை அனுமதிக்கப்படுவர்.

வரும் 22-ம் தேதி எட்டாம் திருநாள் பட்டாபிஷேகத்தன்று சுவாமி புறப்பாடு காலை 8 மணிமுதல் 9 வரையும், மாலையில் 6.30மணி முதல் 9 மணி வரையும் நடைபெறும். பக்தர்களுக்கு காலை 6 மணியிலிருந்து 8 வரையும், மாலை 4 மணிமுதல் 6.30 வரையும் அனுமதியளிக்கப்படும். 

வரும் 23-ம் தேதி திக்குவிஜயம் சுவாமி புறப்பாடு காலை 8 மணிமுதல் 9 வரை, மாலை 5.30 மணிமுதல் 7.30வரை நடைபெறும். பக்தர்கள் காலை 6 மணிமுதல் 8 வரையும்,  9 மணிமுதல் 12.30 வரையும், மாலை 5.30 மணிமுதல் 7.30 வரையும் அனுமதிக்கப்படுவர்.

வரும் 24-ம் தேதி 10-ம் திருநாள் திருக்கல்யாணம் 8.30 மணிமுதல் 9 மணிக்குள் நடைபெறும். அதனைத்தொடர்ந்து பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருமண கோலத்தில் காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். பின்னர் 3.30 மணி முதல் 5.30 வரையும், மாலை 7.30 மணிமுதல் 9 வரையும். மாலை 5.30 மணிமுதல் 7.30 வரையும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

வரும் 25-ம் தேதி சட்டத்தேர் காலை 5 மணிமுதல் 7 மணிக்குள் நடைபெறும். வரும் 26-ம் தேதி 12-ம் திருநாள் சுவாமி புறப்பாடு 10.30 மணிமுதல் 12.30 வரை, மாலை 5.30 மணிமுதல் 7.30 வரை நடைபெறும். பக்தர்கள் காலை 7 மணி முதல் 10.30 வரையும், 4 மணி முதல் 5.30 வரையும், 7.30 மணிமுதல் 9 வரையும் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து