முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை தொடர்ந்து 2-வது ஆண்டாக ரத்து

திங்கட்கிழமை, 21 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. 

இந்த நிலையில், நடப்பு ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலை பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டு இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து