முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

54 தடகள வீரர்கள் உள்ளிட்ட 88 பேருடன் இந்திய ஒலிம்பிக் அணியின் முதல் குழு டோக்கியோ சென்றடைந்தது

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிக்கு 5 நாட்களே உள்ள நிலையில், இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக வீரர்-வீராங்கனைகள் அடங்கிய 88 பேர் நேற்று முன்தினம் டோக்கியோ புறப்பட்டு சென்றனர்.  இதில் 54 பேர் தடகள வீரர்-வீராங்கனைகள் ஆவர்.

127 வீரர்-வீராங்கனை...

ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் வரும் வெள்ளியன்று தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக 88 பேர் ஜப்பான் சென்றடைந்தனர். இந்த போட்டியில் இந்தியா சார்பில் 127 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.  

தடகள வீரர்கள்...

போட்டிக்கு 4 நாட்களே உள்ள நிலையில், இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக வீரர்-வீராங்கனைகள் அடங்கிய 88 பேர் நேற்று முன்தினம் டோக்கியோ புறப்பட்டு சென்றனர்.  இதில் 54 பேர் தடகள வீரர்-வீராங்கனைகள் ஆவர். அவர்களின் உதவியாளர்கள் மற்றும் இந்திய ஒலிம்பிக் அசோசியேஷனின் பிரதிநிதிகளும் உடன் சென்றுள்ளனர்.   

ஒலிம்பிக் கிராமம்...

முதல் கட்டமாக சென்ற குழுவில், வில்வித்தை, பூப்பந்து, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் மற்றும் பளு தூக்குதல் பிரிவில் கலந்துகொள்ள உள்ளவர்கள் இடம் பெற்றுள்ளனர்.  இந்த குழு நேற்று காலை ஜப்பான் சென்றடைந்து.  டோக்கியோ விமான நிலையம் சென்ற அடைந்த அவர்கள், அதன்பின்னர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஒலிம்பிக் கிராமத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து