முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்நாத்சிங், ஜெய்சங்கருடன் பேச்சு நடத்த ஆஸ்திரேலிய அமைச்சர்கள் இந்தியா வருகை

வியாழக்கிழமை, 9 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

ராஜ்நாத்சிங், ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆஸ்திரேலிய ராணுவ, வெளியுறவு அமைச்சர்கள் இந்தியா வருகை தர உள்ளனர்.

இந்தோ - பசிபிக் பிராந்திய நாடுகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன. பாதுகாப்பான, வலுவான, வளமான இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நாடுகளிடையே நட்புறவு நிலவி வருகிறது.

இந்த நாடுகளின் ராணுவ, வெளியுறவு அமைச்சர்கள் 2+2 பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒருவருக்கொருவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அந்தவகையில், ஆஸ்திரேலிய ராணுவ அமைச்சர் பீட்டர் டட்டான், வெளியுறவுத்துறை அமைச்சர் மரிஸ் பய்னே ஆகியோர் இந்தியா வருகிறார்கள். பீட்டர் டட்டான், இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்குடனும், மரிஸ் பய்னே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

பொருளாதார பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, பருவநிலை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இருதரப்பினரும் பேச உள்ளனர். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த கூட்டு நடவடிக்கைகள், சமமான, பாதுகாப்பான முறையில் தடுப்பூசிகள் வினியோகம், சர்வதேச பொருளாதார மீட்புக்கான முயற்சிகள் ஆகியவை குறித்தும் அவர்கள் விவாதிக்க உள்ளனர். இந்திய பயணத்தை தொடர்ந்து, இந்தோனேஷியா, தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் அவர்கள் செல்ல உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து