எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடுத்த 15 வருடங்களில் உலகத்துக்கு அதிக நன்மைகளை செய்வதை பிரிக்ஸ் அமைப்பு உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வலியறுத்தியுள்ளார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்' கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பின் 13- வது உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. 2012 மற்றும் 2016-ம் ஆண்டுக்கு பிறகு 3-வது முறையாக இந்த ஆண்டின் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தியது.
பிரிக்ஸ்' உச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவது இது 2-வது முறையாகும். முன்னதாக 2016-ம் ஆண்டு கோவாவில் நடந்த மாநாட்டுக்கு அவர் தலைமை தாங்கினார்.
இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு, ‘தொடர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமித்த கருத்துக்கான பிரிக்ஸ் உள் ஒத்துழைப்பு’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடைபெற்றது. ஆப்கன் விவகாரம் உட்பட சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக இந்த மாநாட்டில் ஆலோசனை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
பிரிக்ஸ் அமைப்பின் 15-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெறும் இந்த உச்சி மாநாட்டிற்கு தலைமை வகிப்பது எனக்கும் இந்தியாவுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய உச்சி மாநாட்டிற்கான விரிவான செயல்திட்டம் உங்கள் முன்னால் உள்ளது. நீங்கள் ஒப்புதல் அளித்தால் இந்த செயல்திட்டத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாம். நன்றி, செயல்திட்டம் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.
இந்த தலைமை பொறுப்பின் போது அனைத்து பிரிக்ஸ் பங்குதாரர்கள் மற்றும் அனைவரிடமிருந்தும் முழு ஒத்துழைப்பை இந்தியா பெற்றது அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றி மிகுந்தவன் ஆவேன். கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை பிரிக்ஸ் தளம் சந்தித்துள்ளது. உலகின் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கான சக்தி மிகுந்த குரலாக இன்றைக்கு நாம் இருக்கிறோம். வளர்ந்து வரும் நாடுகளின் முன்னுரிமைகள் மீது கவனம் செலுத்துவதற்கும் பயனுள்ளதாக இந்த தளம் விளங்குகிறது.
புதிய வளர்ச்சி வங்கி, எதிர்பாராமல் ஏற்படும் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடு மற்றும் எரிசக்தி ஆராய்ச்சி ஒத்துழைப்பு தளம் உள்ளிட்ட வலுவான அமைப்புகளை பிரிக்ஸ் உருவாக்கி உள்ளது. இவை அனைத்தும் மிகவும் வலுவான அமைப்புகள். நாம் பெருமைப்பட நிறைய இருக்கிறது என்பதில் சந்தேகம் ஏதுவுமில்லை. அதே சமயம், நாம் மிகவும் சுய-திருப்தி அடைந்து விடாமல், இன்னும் அதிக நன்மைகளை அடுத்த 15 வருடங்களில் பிரிக்ஸ் உருவாக்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
இந்த வருடம், கோவிட் ஏற்படுத்திய சவால்களுக்கு இடையிலும் 150-க்கும் அதிகமான பிரிக்ஸ் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன இவற்றில் 20-க்கும் அதிகமானவை அமைச்சர்கள் மட்டத்தில் ஆனவையாகும். பாரம்பரிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, பிரிக்ஸ் செயல்திட்டத்தை மேலும் விரிவாக்கவும் நாம் முயற்சிகளை மேற்கொண்டோம். இதன் காரணமாக முதன்முறையாக பலவற்றை பிரிக்ஸ் சாதித்தது. முதல் முறையாக டிஜிட்டல் பிரிக்ஸ் உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் சுகாதார அணுகலை அதிகரிப்பதற்கான புதுமையான நடவடிக்கை இதுவாகும். வரும் நவம்பர் மாதத்தில், பிரிக்ஸ் கூட்டமைப்பின் கீழ் நமது நீர்வள அமைச்சர்கள் முதல் முறையாக சந்திக்க உள்ளார்கள். 'பல்முனை அமைப்புகளை வலுப்படுத்தி, சீர்திருத்துவதற்கான கூட்டு நிலை'-யையும் முதல் முறையாக பிரிக்ஸ் எடுத்துள்ளது.
பிரிக்ஸ் தீவிரவாத எதிர்ப்பு செயல் திட்டத்தையும் நாம் நிறைவேற்றியுள்ளோம். நமது விண்வெளி முகமைகளுக்கு இடையேயான தொலைதூர உணர் செயற்கைக் கோள்களின் கூட்டுஒத்துழைப்புக்கான புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. நமது சுங்கத் துறைகளுக்கு இடையேயான கூட்டின் மூலம் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் எளிதாக நடைபெறும். மேலும், மெய்நிகர் பிரிக்ஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தொடங்குவதிலும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பசுமை சுற்றுலாவுக்கான பிரிக்ஸ் கூட்டு மற்றுமொரு புதிய முன்முயற்சியாகும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.
-
வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு
18 Sep 2025ஆண்டிபட்டி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நேற்று (செப்.18) காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
-
காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
18 Sep 2025மே.தீவுகள் அணி அறிவிப்பு
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


